...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 17, 2017

                               ஸ்ரீ(தரன்)ரங்கம்   அழைக்கிறது
ஸ்ரீ ரங்கம்  நம்மை அழைக்கிறது --
சீக்கிரம் புறப்பட்டு வா ! 
பிரிவால் குடியேறிய கவலை 
சிலந்திகளை அப்புற படுத்திவிட்டு 
சிங்கமென சிலிர்த்து வா !
தம்மை குறித்தோ -எம்மை குறித்தோ  என்றில்லாமல்
நம்மை குறித்து மட்டுமே நாம் பேசப்போகிறோம்
கோட்ட கிளைகளில் மீண்டும் ஒற்றுமை எனும்
வேர் ஊடுருவ போகிறது -
தோழமை மீண்டும் எங்கள்
தோழ்களில் தவழ போகிறது
உன்னை காட்டி என்னையும் ---
என்னை காட்டி உன்னையும் நடக்கும்
பேரங்களுக்கு இங்கு வாய்ப்பில்லை 
தமிழக அஞ்சல் மூன்று -மீண்டும் ஒரு
சிங்க கர்ஜனையை பார்க்க போகிறது -
தட்டிக்கழித்த நிர்வாகங்கள் இனி பழைய
சிம்ம சொப்பனங்களை சந்திக்க வேண்டியுள்ளது
அலட்சியமாய் பார்த்த அதிகாரிகள் --நம்மை
அச்சத்தோடு பார்க்கும் பழைய காலங்கள் மலரப்போகிறது
சற்று தளர்ந்து போன எங்கள் உள்ளங்களில்
உறுதி தன்னை உயிர்ப்பித்து கொள்ள போகிறது --அப்பாவிகளை
தண்டிக்க துடித்த அதிகாரங்கள் எல்லாம் இனி எப்படியாவது
தப்பித்து கொள்ள தன்னை தயார்படுத்த போகிறது
கோட்ட கிளைகளில் --எங்கள் கொடிமரங்களில்
NFPE எனும் செவ்வண்ண கொடி பட்டொளி வீசி பறக்க போகிறது
NCA தந்த அணி
அரசியல் சாரா அணி எங்கள் அணி --.
அண்ணன் பாலு கடந்து வந்த கடினமான பாதை
தலைவர் KVS செப்பனிட்டு தந்திருக்கும் அழகான பாதை
கோட்டங்களில் தோன்றியிருக்கும் புது புது தளபதிகள்
நாளைய தலைமையை ஏற்கும் எங்கள் இளைய பாசறைகள் -என்ற
எங்கள் பயணம் புதிய பாதையில் பயணிக்க போகிறது
வீறு கொண்டு வா !வெற்றி எப்போதும் நம் பக்கம் என்றாலும்
நேர் கொண்டு வா !
வாகை சூட -காவேரி கரையில்
வசந்த அழைப்புகள் காத்திருக்க
 கசந்த காலங்களை மறந்து நீயும் வா !
தம்மை பற்றியா ?எம்மை பற்றியா !என்பதனை கடந்து
நம்மை பற்றி பேச மட்டுமே என்ற நம்பிக்கையோடு வா ..வா ..வா .
                           ----------------    SK .ஜேக்கப் ராஜ் -------------------------

0 comments:

Post a Comment