...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 26, 2017

                      செங்கையில் சங்கமித்த முகவை 
எழுச்சிப்பாசறையா?
பேரெழுச்சி பாசறையா ?
செங்கை இன்னும் எத்தனை வெற்றி 
சங்கை முழங்கப்போகிறது ?
ஸ்ரீரங்க மகிச்சியே இன்னும் 
மனதை விட்டு துளிகூட மறையாத  நிலையில்
புது நிகழ்ச்சியில் 
உள்ளமும் உறவும் திக்குமுக்காடுகிறது 
ஆட்சியாளர்களின் அகந்தைக்கு முக்காடுஇடு கிறது 
இதுஎன்ன 
KVS -பாலு தம்பியர்களுக்கு கிடைத்த 
புது மகுடமா ? 
பேரவையே !
உன் செட்டையை இன்னும் அகலமாக்கிக்கொள் !
உன்அஸ்திவாரத்தை முன்னைவிட ஆழமாக்கிக்கொள் !
இது அரசியல் மாற்றத்துக்கு அறிகுறி -வெறும் 
பருவமாற்றம் என அலட்சியம் செய்துவிடாதீர் 
துருவங்கள் இணைவது அதிசயம் தான் 
இணைந்து கொண்டே இருப்பது ஆச்சர்யம் அல்லவா ?
இலைகள் உதிரும் 
கிளைகள் முறியும் -இங்கே 
கிளைகள் இணைகிறது 
இலைகள் துளிர்கின்றது !
பேரவையே !உனக்கென்ன 
இத்தனை வேகம் !எத்தனைஆர்வம் 
ஒட்டு மொத்த தென்மண்டலத்தையும் 
வாரி அனைத்துகொண்டாயே !
விட்டு போன மண்டலத்திலும் 
தேதி குறித்தாயாமே !   
கீர்த்தி புகழ் மூர்த்திகள் 
பேரவைக்கு கிடைத்த பொக்கிஷங்கள் 
பரமக்குடி -ராமநாதபுரம்  நம் 
பட்டியலில் மட்டுமல்ல    நம் 
பராமரிப்பில் -நம் பாதுகாப்பில் 
பேரவையின் கிளைகளை 
அதிகார வல்லுருகளிடம் இருந்து 
பாதுகாப்போம் -
பரமக்குடி ராமநாதபுரம்-பாரம்பரியமிக்க 
பழையநிலையை புதுப்பிப்போம் 
                                          நன்றி .SK .ஜேக்கப் ராஜ் 
(பரமக்குடி ராமநாதபுரம் நம் எழுச்சி பேரவையோடு செங்கல்பட்டு கோட்ட மாநாட்டில் அண்ணன் KVS -JR முன்னிலையில் இணைந்த நிகழ்ச்சிகளை குறித்து )



0 comments:

Post a Comment