...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 20, 2020

                                                    முக்கிய செய்திகள் 
வருகிற பெப்ருவரி 9-11 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெறும் அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டில் நமது கோட்டத்தின் சார்பாக சார்பாளர்களாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் வண்ணமுத்து அழகுமுத்து பிரபாகர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .பார்வையாளர்களாக தோழர்கள் சங்கர் ஆவுடைநாயகம் நெல்லையப்பன் சுடலைமுத்து ஆசைத்தம்பி அனந்த ராஜ் அர்ஜுனன் நாகராஜ் இளங்கோ மற்றும் அண்ணன் குருசாமி கலியபெருமாள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .சார்பாளர் /[பார்வையாளர் கட்டணம் ரூபாய் 2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது .மேலும் வரவிரும்பும் தோழர்கள் நமது இளைய தோழர்கள் ஆனந்தராஜ் அர்ஜுனன் நாகராஜ் ஆகிய தோழர்களில் யாரையாவது தொடர்புகொண்டு ரயில் டிக்கெட் எடுக்க தொடர்புகொள்ளலாம் .நேரிடையாக வரவிரும்புகிறவர்கள் கோட்ட செயலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம் .
   வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலைநிறுத்தம் வெல்லட்டும் 
   வருகிற 31.01.2020 மற்றும் 01.02.2020 ஆகிய இரண்டுநாட்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெல்லட்டும் .ஏற்கனவே இந்தமாதம் 8 ம் தேதி பொதுவேலைநிறுத்தத்திலும் வங்கி ஊழியர்கள் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி (பொ ) கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment