...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 24, 2020

                                            நன்றி !நன்றி !நன்றி !
நெல்லை கோட்ட பிரச்சினையில் நல்லதொரு தீர்வை பெற்றுத்தந்த மாநிலச்சங்கத்திற்கும் பிரச்சினைகளை மிக சரியாக கையாண்ட நம் தலைவர் அறிவுஜீவி அண்ணன் KVS அவர்களுக்கும் உடனடியாக தலைவரின் கட்டளையை ஏற்று செயல்பட்ட மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கும் தென்மண்டல அலுவலகத்தின் நேரடி கவனத்திற்கு உடனடியாக கொண்டுசென்ற தென்மண்டல செயலர் அண்ணன் சுப்பிரமணியன் அவர்களுக்கும் மண்டலச்செயலருடன் இனைந்து பணியாற்றிவரும் மதுரை கோட்ட செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மாநிலச்சங்க தலையீ ட்டினால்  நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் 31.01.2020 அன்று பணிநிறைவு பெறுவதை ஒட்டி தேவையில்லாத எந்த உத்தரவையும் போடக்கூடாது என தொலைபேசியிலும் வழிகாட்டுதலும் மண்டல அலுவலகத்தில் இருந்து வந்துள்ளது என்ற மண்டலச்செயலரின் செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
                                               நாம் (NFPE )எதிர்ப்பதும் வாழ்த்துவதும் -நிர்வாகத்தின் நடவடிக்கையை மட்டும் தானே தவிர தனிப்பட்ட எந்த  .அதிகாரியையும் அல்ல என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் ...
மீண்டும் நமது மாநிலச்சங்கம் தலமட்டங்களில் நடக்கும் போராட்டத்தை ஊக்கப்படுத்துவதும் உற்சாகமூட்டுவதும் உடனிருப்பதும் பழைய தொழிற்சங்க பொற்(போர் )காலத்தை நினைவு படுத்துகிறது ..இன்குலாப் ஜிந்தாபாத் !
நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment