...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 5, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                        நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -4
    வணக்கம் 7.6.2020 யில் நடைபெறும் நமது கோட்ட மாநாட்டில்  பங்கேற்றிட உங்களை மீண்டும் அழைக்கிறோம் மிக சரியாக மாநாட்டை காலை 10 மணிக்கு தொடங்கிட உங்கள் ஒத்துழைப்பு மிகஅவசியம் நமது கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு இணையாக மகிளா கமிட்டியில் தோழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவுசெய்திருக்கிறோம் .தோழியர்களை  தொழிற்சங்க பணிகளில் இன்னும் ஆர்வமாக ஈடுபடுத்திட இந்த மாநாடு முக்கிய பங்காற்றும் என நம்புகிறோம் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கும் RULE 38 யில் வந்திருக்கும் தோழர்களுக்கும் இந்த மாநாடு புத்துணர்வை ஊட்டட்டும் புதிய நம்பிக்கையை   காட்டட்டும்                                                         
                                                            வரவேற்கிறோம் 
*நாகப்பட்டினம் கோட்டத்தில் இருந்து RULE 38 யில் இடமாறுதல் பெற்று இன்று பணகுடி அஞ்சலகத்தில் எழுத்தராக பணியில் சேரும் அருமை தம்பி ராமகிருஷ்ணன் அவர்களை NELLAI NFPE வாழ்த்திவரவேற்கிறது தோழர் ராமகிருஷ்ணன் முன்னாள் பெருமாள்புரம் தபால்காரர் அண்ணன் பொன்னுசாமி அவர்களின் புதல்வர் என்பது குறிபிடத்தக்கது 
* தருமபுரி கோட்டத்தில் இருந்து தபால்காரராக பெருமாள்புரத்தில் பணியில் சேர்ந்திருக்கும் தோழர் அஜன் மத்திய சென்னை கோட்டத்தில் இருந்து திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் 
சேர்ந்திருக்கும் தோழியர் மாரியம்மாள் மற்றும் மதுரை கோட்டத்தில் இருந்து பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் சேர்ந்திருக்கும் தோழியர்   வள்ளி ராஜேஸ்வரி   அவர்களையும் வரவேற்கிறோம் இவர் பாளை முன்னாள் தபால்காரர் கணேசன் அவர்களின் புதல்வி ஆவார் 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -----T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment