...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 16, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
                                 முக்கிய செய்திகள் --மாநில சங்க கடிதங்கள் ..........
*   10000 ரூபாய்க்கு மேல் SB அக்கவுண்டில் பணம் எடுத்தால் மீண்டும் PRI வெரிஃபிகேஷன் செய்வதை இலாகா விதியின்படி (SB -9/2018_)ரத்து செய்திட ஏற்கனவே நாம் கொடுத்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்திற்கு மாநில சங்கம் மீண்டும் நினைவூட்டுக் கடிதம்  15/06/2020    அன்று எழுதியுள்ளது .
*   காலியாக உள்ள எழுத்தர் பதவிகளில் தகுதிவாய்ந்த GDS ஊழியர்களை கொண்டு பணியாற்றிட நடவடிக்கை எடுத்திட அகில இந்திய சங்கத்திற்கு மாநில சங்கம்  வலியுறுத்தியுள்ளது 
*     வேகமாக பரவி வரும் கொரானாவால்  சிக்கித் தவிக்கும் காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் முக்கிய சேவைகளை தவிர்த்து பிற சேவைகளை ரத்து செய்யக்கோரி மாநிலச் சங்கத்தின்  சார்பாக  மண்டல நிர்வாகத்திற்கு  கடிதம்   எழுதியுள்ளது 
*  கிளை அஞ்சலகங்களில் துவங்கப்படும் SB /TD கணக்குகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையானது டெபாசிட்டர் அந்தந்த பட்டுவாடா பகுதியில் வசிப்பவராக இருக்கவேண்டும் என்று      POSB(CBS)Manual/POSB  யில்  திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது   
*2020 ம் ஆண்டிற்கான   இலாகா தேர்வில் கலந்துகொள்ளும் GDS   ஊழியர்களுக்கான சேவை தகுதிகள் 
MTS தேர்விற்கு 01.01..2017 க்கு   முன்பாகவும் தபால்காரர் தேர்விற்கு 01.01.2015 க்கு முன்பாகவும் GDS ஆக பணிநியமனம் பெற்றிருக்கவேண்டும்  
*வள்ளியூர் உபகோட்டத்தில் மெயில் ஓவர்சியர் பதவிக்கு விருப்பமனுக்கள் கோரப்பட்டுள்ளன /கடைசி  தேதி 19.06.2020
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T-புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை  
            

0 comments:

Post a Comment