...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, June 18, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
 *கொரானா எனும் பேராபத்தின் உச்சகட்டமாக ஒவ்வொருநாளும் நம் அஞ்சல் ஊழியர்கள் மரணமடைந்துவருவது தொடர்கதையாகிவிட்டது சென்னை   தோழர் ஜெயபிரகாஷ் மறைவு செய்தி முடிவதற்குள்  பெசன்ட்நகர் முன்னாள் எழுத்தர் தோழியர் தேவகி மரணச்செய்தி வந்துள்ளதுஏற்கனவே சூளைமேடு அலுவலக ஊழியர்களில் மூவருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது ..நமது கோட்டத்தில் மஹாராஜநகர் அஞ்சலகத்தில் அருகிலுள்ள நமது அஞ்சல்துறைக்கு மிகவும் நெருக்கமான மருத்துவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது .இதுகுறித்து மஹாராஜநகர் அஞ்சலை அதிகாரி அவர்கள் கோட்ட அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் .நாமும் நேற்று மாலை ASP (HOS) அவர்களை சந்தித்து மஹாராஜநகர் அலுவலக ஊழியர்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியிருக்கிறோம் 
மாநிலச்சங்க செய்தியில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் அதி தீவிரமாக பரவும் கொரானா தொற்று குறித்தும் இதுவரை சென்னையில்  தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல தோழர்களின் நிலைமையை எடுத்துக் கூறியும் இறந்துவிட்ட தோழர்களின் விவரங்களை முழுமையாக கொடுத்து  மாநிலச் சங்கத்தின் சார்பாக நமது மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அவர்களிடம் விளக்கமாக கடிதம் கொடுக்கப்பட்டது. 
 *நாளை நடைபெறவுள்ள மத்தி யசங்க செயற்குழுவில் தமிழகம் சார்பாக வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் 
1. COVID 19,  தாக்கத்தினால் இறந்த ஊழியர்களின் குடுமப உறுப்பினர் ஒருவருக்கு எல்லா விதிமுறைகளையும் தளர்த்தி உடனே கருணைஅடிப்படையிலான பணி வழங்கிடவேண்டும் 
2.ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து இல்லாத /கர்ப்பிணி பெண்கள் /ஊனமுற்றவர்கள் இவர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிடவேண்டும் 
3.அஞ்சல் ஊழியர்களுக்கு வாரம் 5நாட்கள் வேலை அல்லது வங்கிகளைப்போல் IPPB வரை நீட்டிக்கப்பட்ட இரண்டாம் மற்றும் நான்காம் சனிகிழமை விடுமுறை வழங்கவேண்டும் 
4.ஆய்வாளர் தேர்விற்கு பழையகாலங்களில் இருந்ததை போல் குறைந்தபட்ச சேவை காலம் 5 வருடம் என மாற்றவேண்டும் 
5.LRPA என்னிக்கை 20 சதமாக உயர்த்தவேண்டும் 
6.HSG II &HSG I பதவிகளை நிரப்பிட குறைந்தபட்ச சேவைக்காலத்தை தளர்த்தி ONETIME MEASURE அடிப்படையில்  பதவி உயர்வு வழங்கிடவேண்டும் 
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் 

0 comments:

Post a Comment