...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, November 29, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

நெல்லை கோட்டத்தில் மீண்டும் ஒரு உபகோட்ட அதிகாரியின் ஊழியர் விரோத போக்கு /இலாகா விதிமீறல்/ மற்றும் கண்காணிப்பாளரின் உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் செயல் தொடர்வது கண்டிக்கத்தக்கது .

*வேலை நேரம் முடிந்தபிறகும் ஆய்வு எனற பெயரில் இரவு 8.30 மணி வரை துணை அஞ்சலக ஊழியர்களை அலுவலகத்தில் இருக்க வைத்த கொடுமை 

*கிளை அஞ்சலகங்களுக்கு செல்லாமலே கிளை அஞ்சலக பதிவேடுகளை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு வரச்சொல்லி ஆய்வு மேற்கொள்ளும் பித்தலாட்டம் 

* சொந்த வாகனத்தில் செல்லாமல் அடுத்தவர் வாகனத்தில் சென்றுகொண்டு மயிலேஜ் விண்ணப்பிக்கும் தவறான செயல் 

*GDS  ஊழியர்களுக்கு OFFICIATING பார்க்கவிடாமல் உப்புசப்பு காரணங்களை சொல்லி கிளை அஞ்சலகங்களுக்கு விரட்டிவிடும் ஆணவ போக்கு 

*OUTSIDER களை கூட பந்தாடும் அதிகார திமிர் 

இதுபோன்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்திட  பாதிக்கப்பட்ட  தோழர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்திட அந்தந்த பகுதி ஊழியர்கள் உங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற இதுபோன்ற முறைகேடுகளை /அத்துமீறல்களை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிவைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment