...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 30, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

இன்று திருநெல்வேலி உபகோட்ட அதிகாரி திருமதி K .சண்முக பிரியா அவர்க்ளின் ஊழியர் நலனுக்கு எதிரான செயல் /மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இவைகளை கண்டித்து நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் வெற்றிபெறட்டும் ...

நாள் 30.11.2021   பாளையம்கோட்டை HO  மாலை 05.45 

மழை வந்தால் என்ன ?மனம் கலங்காதீர் !தவறாது ஆர்பாட்டத்தில் பங்கேற்பீர் !

நேற்று மாலை நமது SSP அவர்களை சந்தித்து நமது ஆர்ப்பாட்டம் குறித்த நோட்டீஸ் மற்றும் அம்மையாரின் நடவடிக்கைகள் குறித்த கடிதம் ஒன்றும் கொடுக்கப்பட்டது .

சுமார் 15நிமிடங்களில் SSP அவர்கள் நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு ASP அவர்களிடம் இது குறித்து பேசிய சில விஷயங்களை பேசினார்கள் 

*அலுவலக நேரம் முடிந்தும் ஆய்வு என்கின்ற பெயரில் SPM ஊழியர்களை பலமணிநேரம் காக்க வைத்தது குறித்து ...ASPதரப்பில் ஒரு SO வில் ஸ்டாம்ப் 90ரூபாய் TALLYஆகவில்லை அதான் நேரம் ஆகிவிட்து என்றாராம் .இவர் இந்தக்கோட்டத்திற்கு வந்து மூன்று ஆண்டுகள் முடியப்போகிறது .ஆய்வு செய்த அத்தனை அலுவலகங்களிலும் ஊழியர்களை பணிநேரம் முடிந்தபிறகும் SPMதோழர்களை காக்கவைத்திருக்கிறார் அப்படி என்றால் கோளாறு எங்கே ?எல்லா அலுவலகத்திலும் TALLYஆகவில்லையா ? இது அவரது வாடிக்கை என பதில் சொன்னோம் .

*ஆய்வை அந்தந்த் கிளை அஞ்சலகங்களில் மேற்கொள்ளாமல் கிளை அஞ்சலக RECORDS அனைத்தையும் தனது அலுவலகத்திற்கு கொண்டுவரச்சொல்லி ஆய்வு நடத்தியை மறுக்கமுடியாது ஏன் மறைக்கவும் முடியாது 

*ஒவ்வொரு OUTSIDER யும் கட்டாயம் RPLI ரூபாய் 5லட்சம் பாலிசி போடப்பட்டுள்ளது .கொடுமையல்லவா  ?OUTSIDER க்ளின் வறுமையை பயன்படுத்திதான் இலக்கை எட்டியதாக வாழ்த்து பெறவேண்டுமா ?

*சம்பந்தப்பட்ட SPMஊழியர்களுக்கு கூட தெரிவிக்காமல் OUTSIDER ARRANGEMENT யை மாற்றுவதும் யார் யார் கிளை அஞ்சலகங்களில் பணியாற்றுவது என்பது கூட SPMஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தனி அரசாட்சி நடத்துவதை சகிப்பதா ?

*பணியில் இறந்த ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக பணி வழங்கக்கூட 5லட்சம் பாலிசி போடச்சொல்லி துன்புறுத்துவது ஏற்புடையது தானா ?

*OFFICIATING பார்க்க வேண்டுமா ?நான் சொல்லும் நூறு கணக்கை பிடி இல்லையென்றால் உனது BOவிற்கு செல் என்பெதெல்லாம் முறையாகுமா ?

*ஊழியர்கள் தங்கள் குறைகளை நிர்வாகிகளிடம் சொன்னால் உடனே அந்த ஊழியரின் மேல் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது ஒரு ASPஇக்கு அழகா ?

இதுபோன்று இன்னும் பல்வேறு இம்சைகளை நமது ஊழியர்கள் தாங்கிக்கொண்டு மனதளவில் பொறுமிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் .இன்று நாம் ஆர்ப்பாட்டம் என்றவுடன் மனம் திறந்து திருநெல்வேலி உபகோட்ட ஊழியர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை நம்மிடம் தெரிவிக்கிறார்கள் 

ஆகவே இந்த கொடுமைக்கு முடிவுகட்ட ,அஞ்சல் துறையில் பணியாற்றும் இலாகா ஊழியர்கள் GDS மற்றும் OUTSIDER யாரும் யாருக்கும்  அடிமை அல்ல --இனியும் அடிமை வாழ்வை வாழ நாம் யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்பதனை உணர்த்திடுவோம் 

அதேபோல் தபால் காரர் தோழர்களுக்கு ---நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்காமல் யார் விடுப்பு என்றாலும் உடனே COMBINED DUTYஎன்கின்ற வழக்கத்தை உடைத்து மண்டல /கோட்ட நிர்வாக வழிகாட்டுதல் படி OUTSIDER அனுமதிக்கப்படவேண்டும் மேலும் உபகோட்டம் விட்டு உபகோட்டம் விருப்பப்படும் ஊழியர்களை OFFICIATING பார்க்க அனுமதிக்கவேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்றுடுமாறு மீண்டும் அழைக்கின்றோம் 

போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கன்வீனர் கூட்டு போராட்ட குழு --நெல்லை 

0 comments:

Post a Comment