...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 13, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
     12.12.2019 அன்று நடைபெற்ற கூட்டு பொதுக்குழுவின் முடிவுகள் 
            நெல்லை அஞ்சல் மூன்று &அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு 12.12.2019 அன்று கோட்ட தலைவர்கள் T .அழகுமுத்து P 3 தோழர் சொக்கலிங்கம் P 4 ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கீழ்கண்ட முடிவுகள் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன .
1.அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் விடுப்பில் செல்வதால் அஞ்சல் நான்கின் கோட்ட செயலராக (பொறுப்பு ) தோழர் P .பாலகுருசாமி போஸ்ட்மேன் மஹாராஜநகர் அவர்கள் செயல்படுவார்கள் .
2.வருகிற ஜனவரி 8 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திடவும் அதற்காக ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று ஊழியர்களை சந்திக்கவும் முடிவெடுக்கப்பட்டது .
3.அஞ்சல் மூன்றின் கோவை மாநில மாநாடு நன்கொடையாக நமது உறுப்பினர்களிடம் ரூபாய் 100  பிரிப்பதுஎன்றும் மாநில மாநாட்டிற்கு நெல்லையில் இருந்து திரளாக பங்கேற்பது என்றும் மாநில மாநாட்டிற்கும் -மாநில சங்கத்திற்கும்  நமது கோட்டம் முழு ஆதரவு கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
                         இதர பிரச்சினைகளில் ......
1.நெல்லை கோட்டத்திற்கு இன்று MACP கான கமிட்டி கூடுகிறது 
2.LSG பதவிஉயர்வில் 22 இடங்களே உள்ளநிலையில் 33 தோழர்களுக்கு திருநெல்வேலி ALLOTMENT செய்தது குறித்து மண்டல அலுவலகத்திற்கு கோட்ட அலுவலகத்தால் கடிதம் எழுதப்பட்டுள்ளது .
3.நெல்லையில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்திட ஒருவாரத்திற்குள் கோட்ட நிர்வாகத்திற்கு விரிவான மெமோரண்டம் கொடுத்து விவாதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .(உதா .பாளையம்கோட்டையில் பெண் ஊழியர்களுக்கான RECREATION மற்றும் RESTROOM கொடுப்பதில் உள்ள தாமதம்  ,எந்த விதிகளையும் பின்பற்றாமல்  LSG (SPM) ஊழியர்களை வேறு அலுவலகத்திற்குக்கு டெபுடேஷன் அனுப்பியது ,கோட்ட அலுவலக உத்தரவுகளை கோட்ட நிர்வாகமே அமுல்படுத்திட முடியாத நிலை ,தெற்குகருங்குளம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ADDITIONAL HAND கொடுப்பதில் காட்டும் சுணக்கம் ,மாதக்கணக்கில் ஊழியர்களை வேறு அலுவகத்தில் அட்டாச் செய்திருப்பது உள்ளிட்ட  பிரச்சினைகளில் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோட்ட சங்கம் திட்டங்களை வகுத்தெடுக்கும் என்று உறுதி அளிக்கிறோம் 
நன்றி .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P3 
P.பாலகுருசாமி கோட்ட செயலர் P4 (பொறுப்பு )

                  

0 comments:

Post a Comment