...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 26, 2019

                                        முக்கிய செய்திகள் 
அதிகரித்துவரும் CPGRAMS புகார்கள் குறித்து அஞ்சல் வாரியம் ஆராய்ந்து அத்தகைய புகார்களை குறைக்கும் பொருட்டு அஞ்சல் ஊழியர்களுக்கு மேலும் தேவையான SOFT SKILL மற்றும் LEADERSHIP QUALITY குறித்த பயிற்சிகளை அளிக்க உத்தரவிட்டுள்ளது .
பொதுவாக வருகின்ற புகார்கள் அனைத்தும் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் நெட் கிடைக்கவில்லை -SAP வேலைசெய்யவில்லை(என்ற உண்மையை ) என்று நிரந்தர பதில்களாக  சொல்வதாகவும் மற்றொன்று வாடிக்கையாளர்களுக்கும் அஞ்சல் கவுண்டரில் பணியாற்றும் ஊழியர்களுக்கும்  உள்ள தொடர்பு இடைவெளி ஆகும் .இறுதியாக இதுபோன்று நடக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தாக்கீது வந்துள்ளது .ஆகவே நமது தோழர்கள் கவனமாக கவுண்டர்களில் வாடிக்கையாளர்களை கையாளும்படி கேட்டுக்கொள்கிறோம் (அஞ்சல் வாரிய கடித எண் NO-13-01/2019 DTD 02.09.2019)
         மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் சார்பாக புதுடெல்லியில் நேற்று 25.09.2019 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .5 சத பஞ்சப்படி அறிவிப்பை உடனே அறிவிக்கவேண்டும் போனஸ் மாதம் ஒன்றுக்கு 7000 என்பதை ரூபாய் 18000 ஆக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்றது .(போனஸ் பார்முலாவை மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் நாம் மறந்து ரொம்ப நாளாச்சு )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment