...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 9, 2017

அன்பார்ந்த தோழர்களே !
 2002&2003 காலியிடங்களில் தேர்ச்சியான பழைய GDS தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி 

                    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு 

01.01.2004 க்கு பிறகு GDS இல் இருந்து தபால்காரர் /MTS ஆக  /பதவிஉயர்வு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் புதிய பென்ஷன் அறிமுகமானது .இதில் அந்த தேர்வு எந்த வருடத்திற்க்கான தேர்வு /என்பதனை ஆராயாமல் பொத்தாம் பொதுவாக DATE OF APPOINTMENT என்பதன் அடிப்படையில் 2004 க்கு பிறகு NPS என்ற நிலையை  அஞ்சல் வாரியம் எடுத்தது .2003 இம் ஆண்டுக்கான காலியிடத்தில் ஒருவர் GDS இருந்து MTS ஆக 2004 இல் பதவிஉயர்வு பெற்றவர் தனக்கு பழைய பென்ஷன் அனுமதிக்கவேண்டும் என்று சென்னைநிர்வாக தீர்பாயகத்தில் வழக்கு தொடுத்தார் .துரதிஷ்ட்டமாக சென்னை தீர்பாயகம் அவரது  மனுவை தள்ளுபடி செய்தது .இதை எதிர்த்து நமது பேரவையின் வழக்கறிஞர் திரு R.மலைச்சாமி Bsc BLஅவர்கள் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் சென்னை நீதிமன்றம் ஊழியருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது .எந்த ஆண்டுக்கான தேர்வோ /ஒதுக்கீடோ அதை மையப்படுத்தி 2004 முன் காலியிடங்களில் 2004 க்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பழைய பென்ஷன் பெற தகுதியானவர் என தீர்ப்பு வந்துள்ளது .ஆகவே தமிழகத்தில் பரவலாக 2002 ,--2003 காலியிடங்களில் 2004 க்கு பிறகு தேர்ச்சி பெற்ற அனைத்து GDS தோழர்களும் இந்த தீர்ப்பின் மூலம் பயன்பெற வாய்ப்புஉள்ளது .மேலும் பழைய ED சேவைக்காலத்தையும் கணக்கில் எடுக்க அறிவுறுத்த பட்டுள்ளது .இந்த வழக்கை சிறப்பாக நடத்தி வெற்றி பெற்ற நமது வழக்கறிஞர் உயர்திரு R.மலைச்சாமி அவர்களுக்கு NCA பேரவை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .இது போன்ற பாதிப்புள்ளோர்கள் எங்களை அனுகும் படி கேட்டு கொள்கிறோம் .
  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE P 3 திருநெல்வேலி   9442123416
குறிப்பு -நெல்லை  கோட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நம்மிடம் அனுகி ஏற்கனவே நிர்வாகத்தால் மறுக்கப்பட்ட தோழர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் 



0 comments:

Post a Comment