...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 20, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
       நமது மாநிலச்சங்க அறைகூவலுக்கினங்க இன்று முதல் மூன்று நாட்களுக்கு பணியிடத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து நமது எதிர்ப்பை நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறோம் .நேற்றே அனைத்து அலுவலகங்களுக்கும் பேட்ஜ் அனுப்பப்பட்டுள்ளது .கிடைக்காதவர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் .மேலும் இன்று மதியம்  1மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அருகில் உள்ள தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் .
பல கோடி ரூபாய்கள் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துக்கொண்ட TCS, CSI SAP அறிமுகப்படுத்தி ஒராண்டு ஆன பின்னரும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இயலாமல் தவிக்கின்றது.இந்த நிலையை சீர் செய்ய எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காத அஞ்சல் நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டிக்கிறோம் 
இது போல் CSI யை, அஞ்சல் கணக்கு பிரிவில் அறிமுக படுத்தி, அரசாங்க பணத்தை காக்கும் இவர்களின் பணியை முழுவதும் முடக்கி விட்டது அஞ்சல் நிர்வாகம்.
பல கோடிக்கணக்கான ரூபாய்க்களை Suspense account டிலும், ODயிலும் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த செயலற்ற நிலையை நிர்வாகம் களைய வேண்டும் என்றும், இந்த நிலை மாறாவிட்டால் போராட்ட ங்கள் தீவிரமாகும் என்று Nfpe CoC தமிழ்நாடு எச்சரிக்கை விடுகிறது. 
CBS போராட்டம் போல் CSI பிரச்னைகளின் தீர்வுக்கும், 
முதல் போர் கொடியை தமிழகமே எழுப்புவோம். 
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment