...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 19, 2018

                        அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் C 
                           திருநெல்வேலி கோட்ட கிளை --627002
------------------------------------------------------------------------------------------------------------------
சுற்றறிக்கை 3-/2018-2020                                                              19.06.2018
-----------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே !
                                உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 
நாள் 21.06.2018                        நேரம் மதியம் 1 மணி 
இடம் பாளையம்கோட்டை  HO   
தலைமை தோழர் N .கண்ணன் கோட்ட உதவி தலைவர் 
------------------------------------------------------------------------------------------------------------------------
-CSI- SAP பிரச்னை சம்பந்தமாக  நிர்வாகத்திற்கு பல முறை புகார் செய்தும், ஒரு வாரம் கடந்த பின்னும், உறுதி அளித்தபடி  தேவையான முன்னேற்றம் 
அளிக்கப்படவில்லை. 
CSI அமலாக்குவதில் இருந்த வேகம் பிரச்னையைத் தீர்ப்பதில் காட்டப்பட வில்லை.
கோடிக்கணக்கான ரூபாய்கள் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்த TCS பன்னாட்டுநிறுவனம் CSI அறிமுகப் படுத்தி ஓராண்டு கடந்த பின்னும் பிரச்னைகளை தீர்த்திட இயலாமல் கையாலாகாத நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது
இது,  மக்கள் சேவையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் , கடுமையான ஆட்பற்றாக்குறை 
உள்ள சூழலில் ஊழியர்களை பணி செய்திட இயலாத நிலைக்குத் தள்ளி 
கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. 
TCS என்ற ஒரு தனியார் நிறுவனத்தின் கையை எதிர்பார்த்து,  ஒரு அரசுத் துறையும் இலாக்கா ஊழியர்களும், பொது மக்களும் காத்துக் கிடக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது வேதனை அளிக்கும் நிலையாகும். 
எனவே அஞ்சல் நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து 
நமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் பொருட்டு 
ஊழியர்களைத் திரட்டி  தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்க பட்டுள்ளது .
ஆகவே தோழர் /தோழியர்கள் யாவரும் இந்த முதற்கட்ட போராட்டமான பணியிடங்களில் 20.06.2018 முதல் 22.06.2018 ஆகிய மூன்று நாட்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து நமது எதிர்ப்பை காட்ட வேண்டுகிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



0 comments:

Post a Comment