...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 23, 2018

                                    மூன்றுநாள் கருப்பு அட்டை /ஆர்ப்பாட்டம் இவைகளில் பங்கேற்க உங்கள்  அனைவருக்கும் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிதனையும் தெரிவித்து கொள்கிறோம் .தமிழகம் தழுவிய எழுச்சியின் எதிரொலியாக மாநிலநிர்வாகம் நமது மாநிலச்சங்கத்திற்கு அளித்திட்ட பதில் உங்கள் பார்வைக்கு
, pending EOD, voucher feeding உள்ளிட்டவை இருந்தாலும் ஊழியர்கள் மாலை காத்திருக்காமல் வீட்டுக்குச் செல்லலாம் என CEPT மூலம் உரிய வழிகாட்டுதல் மாலை  6.47 க்கு   நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் வட்டத்திற்கும்  அளிக்கப்பட்டது ;  
நமது அஞ்சல் வட்டத்திற்கு அளிக்கப் பட்ட வழிகாட்டுதலின் நகல் உங்களுக்கு ஏற்கனவே நாம் மாலை  6.57 மணிக்கு  அளித்திருந்தோம். பார்த்திருப்பீர்கள். 
இது முற்றிலும் நமது அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முயற்சியால் கிடைத்த வெற்றியே !
இதனை ஒட்டி இன்று
(22.6.18)  இரவு 7.00 மணியளவில்  நமது CPMG அவர்கள் நமது மாநிலச் செயலரை தொலைபேசியில் அழைத்தார்.
முக்கியமான கூட்டத்தில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்றும், நம்முடைய பிரச்னைகள் , 
அஞ்சல் மூன்று 
மாநிலச் சங்கத்தின்  போராட்டத்தின் கோரிக்கைகள் இயக்குநரகத்திற்கு மாநில நிர்வாகத்தால் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும், அதன்மீது தானே பலமுறை Member Tech, DDG ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும், இதனடிப்படையில் TCS மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் , தற்போது ஒரளவு நிலைமை  மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமக்கு தெரிவித்துள்ளனர் என்றும்,  

இன்னும் குறுகிய 
கால அவகாசத்தில்  முழுமையான தீர்வு காண்பதாக உறுதியளித் துள்ளதாகவும் 
CPMG அவர்கள் நமது மாநிலச் செயலரிடம் தெரிவித்தார். 

மேலும் இன்றைய தினத்தின்  Sify Network/Finacle பிரச்னைகள் குறித்து Dte ல் பேசியதன் அடிப்படையில் இரவு காத்திருப்பு எதுவும் இல்லாமல் ஊழியர்கள் வீடு திரும்ப வழிகாட்டுதல் அளித்ததாகவும் தெரிவித்தார். 
எனவே மாநில  நிர்வாகம் எந்த நேரத்திலும் தங்கள் அளவில் இந்தப் பிரச்னைகளில் ஊழியர்களுக்கு எந்த அளவு முடிந்தாலும் அந்த அளவு 
உதவி செய்யக் காத்திருப்பதாகவும் , எந்த நேரத்தில் பிரச்னை என்றாலும் தன்னை அணுகலாம் என்றும் ஊழியர்களுக்கும் இதனைத்  தெரிவிக்குமாறும் CPMG அவர்கள் தெரிவித்தார். 

நம்முடைய போராட்டங்களை மாநில நிர்வாகம் தவறாக பார்க்க வில்லை என்றும் ஆனால் தங்கள் எல்லை மீறிய பிரச்னைகளில் முழுமையாக உதவிட முடியவில்லை என்றும் தெரிவித்தார். 

TCS கடந்த பிப்ரவரி 2017 லேயே கர்நாடக மாநிலம் மைசூரில் பரீட்சார்த்த ரீதியில் CSI அமல்படுத்தி, பின்னர் பல மாநிலங்களில் செயல்படுத்தி Phase II வில்தான் தமிழ் நாட்டில் அதுவும் நான்கு மாதங்கள் ஒத்திவைத்தபின் தற்போது 2018 ல் அமல் படுத்தும் போது கூட அதன் கோளாறுகளை சரி செய்யவில்லை என்றால்,  இது எந்த வகையில் சரி என நாம் அவரிடம் கேட்டதற்கு, இது முற்றிலும் சரியே;
எங்களுக்கும் இந்த கேள்வி உள்ளது; ஆனால் மேல்மட்ட அழுத்தம் காரணமாகவே 
தாங்கள் CSI  அமல் படுத் வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனக் கூறினார். 

மேலும் பிரச்னைகள் இருப்பின் 27 ந்தேதி நடைபெற உள்ள நான்கு மாதப் 
பேட்டியில் பேசுமாறும் கேட்டுக் கொண்டார். 

 3 ஆண்டு காலத்திற்கு பின்னராக புதிதாக RJCM அமைக்கப்பட உள்ளதால் அதற்கான நியமன ஒப்புதல்களை திங்களன்று வழங்குவதாகவும், அதற்கான ஊழியர் தரப்பு தலைவர், செயலாளர் தேர்ந்தெடுத்து அறிவித்தபின் 
Subjects பெற்று 
விரைவில் கூட்டம் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார். 

அதில் எல்லா பிரச்னைகளையும் விவாதிக்கலாம் என்றும் உறுதியளித்தார். 

இன்றைய நிலையில் ஊழியர் படும் அவதியையும் மக்கள் சேவை பாதிக்கப் படுவதையும், பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் சேவை பாதிப்பால் பல இடங்களில்  தகராறு 
 ஏற்படுவதையும் சுட்டிக்காட்டினோம்.

இதே நிலை தொடர்ந்தால் 2015 ல் CBS பிரச்னையில் வேலை நிறுத்தம் செய்தது போன்ற நிலைமை எங்களுக்கு ஏற்படும் என்றும் மாநிலச் செயலர் 
சுட்டிக் காட்டிப்  பேசினார். 

இவைகள் அனைத்தையும் தாங்கள் உணர்வதாகவும்
தங்கள் கவனத்துக்கு தொழிற்சங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரச்னைகளை 
மேலே எடுத்துச் சென்றுள்ளதாகவும், இனி அளிக்கப்படும் பிரச்னைகளளையும் மேலே எடுத்துச் சென்று பிரச்னைகளின் தீர்வுக்கு தாம் உதவுவதாகவும் உறுதியளித்தார். 

S.O  Summary, 
ECB Memo , SMR உள்ளிட்டவை என நாம் அளித்த பிரச்னைகளை ஏற்கனவே TCS க்கு எடுத்துச் சென்றுள்ள தாகவும் நிச்சயம் ஒருவாரத்தில் இதில் தீர்வு காணப்படும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். 

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக எழும் எந்த தவறுகளுக்கும் ஊழியர்கள் எவரும் எந்த இடத்திலும் கண்டிப்பாக பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும், அப்படி ஏதும் ஏற்படும் பட்சத்தில் தனது கவனத்திற்கு கொண்டுவந்தால் 
உடன் தலையிட்டு தீர்ப்பதாகவும் உறுதியளித்தார்.

இரவுக் காத்திருப்பு என்பது எப்போதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும், அப்படி பிரச்னை ஏதும் ஏற்படும் பட்சத்தில் 
தனது கவனத்துக்கு கொண்டுவந்தால் 
உடன் தலையிட்டுத் தீர்ப்பதாகவும் உறுதியளித்தார்.
                                     -------------------------------------------
எனவே எதிர்வரும் திங்களன்று 
இந்தப் பிரச்னைகள் குறித்தும் Software கோளாறுகள் குறித்தும் CPMG அவர்கள் மூலம் துறையின் செயலருக்கு 
அஞ்சல் மூன்று மாநிலச் சங்கம் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்படும்.

 நமது மாநிலச் சங்க போராட்டத்தின் மீது கவனம் செலுத்தி பிரச்னைகளை தீர்க்க  நமது பிரதிநிதியான மாநிலச் செயலரை திறந்த மனதுடன்  அழைத்துப் பேசி,  பிரச்னைகளின் தீர்வுக்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்த நமது CPMG திரு. சம்பத் அவர்களுக்கும்,  நமது PMG,CCR திரு. ஆனந்த் அவர்களுக்கும் நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது -மாநில சங்க பதிவில் இருந்து ...........
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
----------------------------------------------------------------------------------------------------------------




0 comments:

Post a Comment