...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 8, 2018

                                      போராட்டம் சொல்லும் பாடம் என்ன ?
போராடிய GDS ஊழியர்களை அரசாங்கத்தின் தூதுவராக சென்னையில் நேரில் சந்தித்து உரையாடினார் நமது பாதுகாப்பு துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன்
  இன்று சென்னை T .நகரில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு  நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னை மண்டல GDS ஊழியர்களுடன் கலந்துரையாடினார் .நமது பாரத பிரதமர் மோடிஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் தான் வந்ததாகவும் உங்கள் (GDS) உண்மை நிலைகளை இந்த போராட்டத்தின் மூலம் தான் முழுமையாக தங்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார் .மேலும் இந்த போராட்டத்தில்  கூட தமிழகத்தில் ஒரு அசம்பாவிதம் கூட நடக்காவண்ணம் மிகுந்த கட்டுப்பாட்டோடு நீங்கள் நடந்து கொண்டது பாராட்டிற்குரியது என்றார் .மேலும் இப்பொழுது கொடுத்துள்ளதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் இதர கோரிக்கைகள் குறித்து ஒரு மூன்று மாத இடைவெளிக்கு பிறகு பரிசீலிக்கலாம் என்றார் .அமைச்சரின் பேச்சும் அணுகுமுறையும் நேரில் வந்த ஊழியர்களுக்கு பரவசமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது .GDS ஊழியர்களின் போராட்டம் நமது கோரிக்கை வெற்றியோடு நிற்கவில்லை .அரசையே திரும்பிப்பார்க்கவும் அமைச்சரே ஊழியர் சந்திப்பை நடத்த சொல்லி வந்திருந்தது இன்றைய ஆட்சியின் திருப்புமுனை தான் என்றால் மிகையாகாது .மத்திய பாதுகாப்பு அமைச்சர் மாண்புமிகு  நிர்மலா சீதாராமன் அவர்கள்தமிழகத்தை  பூர்விகமாக கொண்டவர்கள் என்பதும் இனிய தமிழில் உரையாற்றியது மேலும் ஊழியர்களுக்கு மண நிறைவை தந்திருந்தது ...இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டலத்தை சார்ந்த PMG கள் /DPS HQS  ஆகியோர்களும் கலந்து கொண்டனர் .கலந்து கொண்டு கருத்து சொன்ன ஊழியர்கள் GDS ஊழியர்களுக்கு தனி சீருடை வழங்கவேண்டும் என்று புதிய கோரிக்கையை வைத்ததும் குறிப்பிடத்தக்கது .
.நன்றி .தகவல் தோழர் V.பார்த்திபன் முன்னாள் மாநில செயலர் அஞ்சல் மூன்று 

0 comments:

Post a Comment