...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 15, 2017

இடியாப்ப சிக்கலில் கேடர் சீரமைப்பு --ஊழியர்களைவிட அதிக குழப்பத்தில் நிர்வாகம் -ஒருநாள் கேடெர் உத்தரவோடு சூழல் மாறுதலை பரிசீலிக்க சொல்கிறது --மறுநாள் கேடர் சீரமைப்பு முன்பாகவே சூழல் மாறுதலின் வேலையை தொடங்க சொல்கிறது -நேற்று மீண்டும் சூழல் மாறுதல் பணியை நிறுத்தி வைக்க சொல்கிறது --இதுகுறித்து நமது மாநில செயலரின் விளக்கங்களை உங்களுக்கு தருகிறோம் 
கேடர் சீரமைப்பும்
கோட்டங்களில் சுழல் மாறுதல்களும்.

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
1. கேடர் சீரமைப்பு பிரச்னையில் நாம் எழுப்பிய பிரச்னைகள் மீது நேற்றுவரை துறையின் செயலர் முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை.

நமது பொதுச் செயலர் நேற்று DDG அவர்களைப் பார்த்து பேசியதாகத் தெரிவித்தார். அதன்படி, CHQ கடிதத்தின் மீது உடன் சாதகமான முடிவெடுக்க வேண்டும் என்றும், தாமதம் ஏற்படும் பட்சத்தில் உடன் C.R. அமலாக்க உத்திரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அப்படி இல்லாது போனால் இந்தியா முழுமைக்கும் வேலைநிறுத்தம் உள்ளிட்ட தீவிர போராட்டத்தில் இறங்க நேரிடும் என்பதையும் தெரிவித்துள்ளதாக மாநிலச் செயலரிடம் தொலைபேசியில் பொதுச் செயலர்  தெரிவித்தார்.

இன்று துறையின் செயலர் அலுவலகத்தில் இருந்த போதும் இது குறித்து பேசிடவில்லை என்றும் தெரிவித்தார். எனவே இதில் எதுவும் அடுத்த வாரமே தெரிய வரும்.

2. இன்று மத்திய மண்டலம் மற்றும் தென் மண்டலத்திலிருந்து பல கோட்டச் செயலர்கள் பேசினார்கள். அதன்படி இந்த இரு மண்டலங்களிலும் நடப்பு ஆண்டுக்கான சுழல் மாறுதல் உத்திரவு அளித்திட மண்டல அலுவலக உத்திரவு வந்துள்ளதாகவும் அதனால் RT போடுவதில் உள்ள பிரச்னை குறித்தும் கேட்டார்கள்.

எனவே இது குறித்து PMG CR Addl charge மற்றும் CPMG அவர்களிடம் P3 மாநிலச் செயலர் பேசினார். PMG SR addl charge அவர்கள் Meeting ல் இருந்த காரணத்தால் அவரிடம் பேசிட இயலவில்லை. (கோவை  மற்றும் சென்னை பெரு நகர மண்டலங்களில் இந்த பிரச்னை இதுவரை எழவில்லை).

பேசியதன்படி,

a) கேடர் சீரமைப்பு தமிழகத்தில் அமல் செய்வதற்கு முன்னர், அகில இந்திய முடிவு எதுவும் உடனடியாக கிடைக்காத படசத்தில் ,  மாநில அளவில் எழக்கூடிய பிரச்னை குறித்து ஊழியர் தரப்புடன் பேசித்தீர்வு காண வரும் வாரத்தில் நேரம் அளிக்குமாறு வேண்டினோம். அதற்கு CPMG அவர்கள் ஒப்புதல் அளித்தார். எனவே மாநில அளவிளான  பிரச்னைகள் குறித்து விரிவான கடிதம் அளிக்க உள்ளோம். கடித நகல் தனியே வெளியிடப்படும்.

b. ஏற்கனவே 'C' class, 'B'  class, 'A' class அஞ்சலகங்கள் LSG மற்றும் HSG II நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு விட்டதால் இந்த அலுவலகங்களுக்கு, மற்றும் பதவி உயர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு கோட்ட அதிகாரி இடமாறுதல் உத்திரவு அளிக்க இயலாது என்றும், மீதமுள்ள T/S PA க்களில் Tenure முடிந்த ஊழியர்களுக்கு மட்டுமே அவரால் இடமாறுதல் அளிக்க முடியும் என்றும்,  அப்படி உள்ளவர்கள் மிகச் சிலரே ஒவ்வொரு கோட்டத்திலும் இருப்பார்கள் என்றும் தெரிவித்தோம். எனவே தற்போது அவசர கதியில் RT போடுவது சரியல்ல என்றும் தெரிவித்தோம்.

மேலும், இந்த ஆண்டு RT , ஏற்கனவே நாம் கோரியபடி C.R. உடன் இணைத்தே அளித்திட கோரினோம். நாம் கூறியது சரியென்றும் இது குறித்து PMG க்களுடன் கலந்து உடன் முடிவெடுப்பதாக CPMG யும், அவ்வாறே PMG MM ம் கூறினார்கள். இதன்மீது உத்திரவு மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம். 
கடைசி செய்தி :-
[13/04, 1:13 PM] S . Meenatchisundaram D/S, Nm: -
RO Trichy has now instructed to defer RT for 2017 pending clarification on CR
= DS AIPEU GR "C" NM.


தோழமையுடன்
NFPE அஞ்சல் மூன்று சங்கம்,  தமிழ் மாநிலம்.

0 comments:

Post a Comment