...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 11, 2017

                                              பிடி இறுகுகிறது 
திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் அவர்களின் மீதான FSC முறைகேடு -மற்றும் இதர அத்துமீறல்கள் குறித்து நேற்று 10.04.2017 அன்று கோவையில் நடந்த இருமாதந்திர பேட்டிக்கு பிறகு நமது மாநிலசெயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் விரிவாக பேசி விளக்கமாக கடிதம் ஒன்றையும் கொடுத்தார்கள் .நமது மரியாதைக்குரிய PMG அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று கொண்டு திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுவதாக உறுதி கூறியுள்ளார்கள் .
உரிய நேரத்தில் நமது கோரிக்கையை PMG அவர்களிடம் கொண்டு சென்று விசாரணைக்கு உத்தரவிட உதவிய நமது அன்பிற்கினிய மாநில செயலர் தோழர் JR அவர்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
 நன்றி --தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
--------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் --MTS காலிப்பணியிடங்கள் பணியாற்றும் GDS ஊழியர்களுக்கு ஏழாவது சம்பளக்குழுவின் ஊதியம் இந்தமாதம் முதல் வழங்குவது என்றும் --அரியர்ஸ் இயக்குனராக ஒப்புதலுக்கு பிறகு வழங்கப்படும் என்றும் கோவையில் 10.04.2017 அன்று நடைபெற்ற இருமாதா ந்திர பேட்டியில் மேற்குமண்டல PMG அவர்கள் உறுதியளித்ததை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது .மேலும் அவர்கள்தான் நமது மண்டலத்திற்கும் கூடுதல் பொறுப்பு என்பதால் நமக்கும் இந்த உத்தரவு விரிவு படுத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் .
  நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

0 comments:

Post a Comment