...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 27, 2018

அன்பார்ந்த தோழர்களே !
               அஞ்சல் நான்கு மத்திய சங்க அறைகூவலை ஏற்று இன்றுமுதல் 27.11.2018 முதல் 29.11.2018 முடிய மூன்று நாட்களுக்கு கருப்பு சின்னம் அணிந்து பணியாற்றிட வேண்டுகிறோம் 
            அகிலஇந்திய தபால்காரர் &MTS சங்கம் சார்பாக 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் முதல் கட்ட போராட்டத்தை வெற்றிபெற செய்வோம் .
                                                         கோரிக்கைகள் 
1.விரிவடைந்துவரும் நகர்ப்புறங்களை கணக்கில் கொண்டு 25000 புதிய தபால் காரர் பதவிகளை உருவாக்கிடவேண்டும் .
2.அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுவீடாக செல்வதற்கு புதிய பணி அளவீடுகளை நிர்ணயிக்க வெண்டும் 
3.தபால்காரர்களுக்கான  LGO தேர்விற்கு கம்ப்யூட்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் 
4.தபால்காரர்களுக்கு கேடர் சீரமைப்பை அமுல்படுத்து 
உள்ளிட்ட 25 கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் கருப்பு சின்னம் இயக்கத்தை வெற்றிபெற செய்வோம் .(கருப்பு சின்னம் அணிவதில் வழக்கம் போல் நெல்லையில்  நாம் அனைவரும் இணைந்து பங்கேற்போம் )
                                                -----------------------------------------------
திருநெல்வேலி உப கோட்டத்தில் OFFICIATING பார்க்கிற GDS ஊழியர்களை 10 லட்சம் பாலிசி பிடிக்க வேண்டும் மேலும் மாதம் ரூபாய் 10000 புதிய பிரிமியம் தரவேண்டும் இல்லையென்றால் OFFICIATING கிடையாது என்று GDS ஊழியர்களை ஒரிஜினல் பணிக்கு செல்ல உத்தரவு இடுவதை நிறுத்தவேண்டும் .ஏற்கனவே COMBINED டூட்டி பிரச்சினை என்பது GDS OFFICIATING பார்ப்பதால் தான் குறைந்திருக்கிறது .மீண்டும் COMBINED DUTY பிரச்சினை வந்தால் அஞ்சல் நான்கும் போராட்ட களம் செல்ல வேண்டியதிருக்கும் .இதுகுறித்து நேற்று GDS செயலர் SSP அவர்களுக்கு கடிதம் எழுதிவிட்டு நம்முடைய ஆதரவை கோரினார்கள் .GDS ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திருநெல்வேலி ASP க்கு எதிரான போராட்டங்களில் NELLAI  அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு மற்றும் GDS சங்கங்கள் முழு ஆதரவு கொடுக்கும் என்று நமது NFPE ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜேக்கப் ராஜ் அவர்கள் உறுதியளித்துள்ளார் .
                                                -------------------------------------
                                                புயல் நிவாரண நிதி 
கஜா பு யலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  நமது இலாக்காவில் பணிபுரிந்து  GDS தோழர்களுக்கு எந்த வித உதவியும் சரிவர கிடைக்கவில்லை..ஆகவே நமது GDS  ஊழியர்களுக்கு  பண உதவி செய்வோர்  தோழர். R. குமார் மத்திய மண்டல செயலர் மத்திய மண்டலம்  அவர்களின் புதுக்கோட்டை HO அஞ்சலக சேமிப்புக் கணக்கு 0010802007 என்ற எண்ணிற்கு நிதி அனுப்பலாம். 
தோழர் குமார் அவர்களின் கைபேசி எண் 099526 82338.
நன்கொடை அனுப்பிவிட்டு அதன் தகவலை கோட்ட சங்கத்திற்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறோம் .நேற்று முதல்கட்டமாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் ரூபாய் 1000 அனுப்பி நிவாரண பணியை தொடங்கி வைத்தார்கள் ..
                                                      மாதாந்திர பேட்டி 
இந்த மாத மாதாந்திர பேட்டி 30.11.2018 மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது .ஏற்கனவே எடுத்த பிரச்சினைகளில் தீர்வில்லை என்றாலும் புதிய பிரச்சினைகள் இருந்தாலும் இன்றே கோட்ட செயலர்களுக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
                                       நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 




0 comments:

Post a Comment