...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 8, 2018

தோழர் நமசிவாயம் PA  திருநெல்வேலி HO அவர்களின் புகாருக்கு கோட்ட சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கும் ஒரு சில பெரிய இடத்து நண்பர்களுக்காக ............. 

1---.FSC பிரச்சினையில் மாற்றுசங்க ஊழியர் ஒருவர் 

நமச்சிவா  யத்தை தொலைபேசியில் மிரட்டினார் என்பதனை தனது வ(ப )ழக்கமான  செல்லில்  பதிவு செய்து திருநெல்வேலி டவுன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்  .தோழர் நமசிவாயத்திற்காக நமது தோழர்கள் தினமும் 10 பேர் 10மணிவரை காவல்நிலையத்தில் காத்திருப்போம் .வழக்கு /விசாரணை மந்தமாக போக நமச்சிவாயம் யாரெல்லாம் அவருக்காக காவல்நிலையத்தில் காத்து கிடந்தனரோ அவர்கள் மீதே சந்தேகப்பட்டு காவல் அதிகாரிகளுடன் நாம் ரகசியமாக உடன்பாடு செய்துவிட்டதாக நம் தோழர்கள் மீதே நம்பிக்கையிழந்து நம்மை மனம் நோகடித்தார் .
2---.திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் வெங்கடேஸ்வரன் இருக்கும் வரை நான் அங்கு பணியாற்றுவது பாதுகாப்பு இல்லாத ஒன்று என்று விடுப்பில் இருந்தார் .விடுப்பில் இருந்தவரை ஒருநாள் மாதாந்திர பேட்டி அன்று கோட்ட அலுவலகத்திற்கு வரவழைத்து மானுர் டெபுடேஷன் போக விருப்பம் என அவர் சம்மதத்துடன் அவரே எழுதியதை வாங்கி மானூருக்கு பயணப்படி  இல்லாமல் அனுப்பியதும் நாம் தான் .(திருநெல்வேலியில் JOIN பண்ணாமலே ) 
3----.ஆனால் அவரே RT விண்ணப்பத்தில்தான்  கட்டாயப்படுத்தி மானூருக்கு அனுப்பப்பட்டேன் என்று முறையிட்டார் .
4.------மானுரில் ரெகுலர்  PA வந்துவிட்டதால் திருநெல்வேலி HO  விற்கு வந்த நமச்சிவாயம் டெபுடேசனுக்கு  பயந்து மாநிலசெயலர் மூலம் (அன்றும் கோட்ட சங்கத்திற்கு தெரியாமல் )அன்றைய SSP (VPC ) அவர்களிடம் பேசி திருநெல்வேலி டவுனில் அட்டாச் செய்யப்பட்டார் .வேறு எந்த கோட்ட செயலராவது இதை அனுமதிப்பீர்களா ? கோட்ட செயலருக்கு தெரியாமல் கோட்ட கண்காணிப்பாளரை மாநில செயலர் ரகசியமாக தொடர்புகொள்வது ஏற்புடையது தானா ?
5------இது குறித்து தோழர்கள் முறையிட (திருநெல்வேலி டவுனுக்கு விருப்பமனுக்கள் ஏராளம் இருக்க எப்படி ஒருவரை அட்டாச் செய்யமுடியும் என்ற வினாகோட்ட சங்கம் மூலம் எழுப்ப அதே SSP (VPC )  அவர்கள் மீண்டும்அதே வேகத்தில்  நமச்சிவாயத்தை திருநெல்வேலிக்கு திருப்பி அனுப்பினார் .
6.-----மானுரில் மீண்டும் ஒரு டெபுடேஷன் உத்தரவு வர நமசிவாயம் வேண்டாத போஸ்ட்மாஸ்டர் என்று சொல்லிக்கொள்ளும் வெங்கடேஸ்வரனை எப்படியோ சம்மதிக்க வைத்து  இந்த TURN அவருக்கு இல்லை என்றாலும் மானூருக்கு வேண்டும் என்றே கேட்டு செல்கிறார் .(இதுவும் டெபுடேஷன் யில் இருந்து தான் மட்டும் தப்பிக்க )
7------பிறகு மானுர் சென்றதற்கு பயணப்படி கேட்டு பில்  அனுப்புகிறார்  .இரண்டு மாதம் கழித்து அவருடைய பில் திரும்பிவருகிறது .இதற்கு கோட்ட செயலர் தான் காரணம் என்றார் மேலும் .கணக்கு பிரிவில் உள்ள நமது தோழியர்களை  குறை சொல்கிறார் .
8.----பயணப்படி  மறுக்கப்பட்ட கடிதத்தை  போஸ்ட்மாஸ்டரிடம்  கேட்க செல்கிறார் .போஸ்ட்மாஸ்டர் மறுக்கிறார் .பின்னர் அந்த கடித நகலை வாங்க(என்னை )  கோட்ட செயலரையே அழைத்து செல்கிறார் .கோட்டசெயலரும்(நானும் ) அவருடன் சென்று போஸ்ட்மாஸ்டரிடம்  அந்த நகலை கான்பித்து குறிப்புகளை எழுதிவாங்கி  கொள்கிறார் .
9-------.03.9.2018 DEPUTAION பிரச்சினையின் போது என்னிடம் வந்து முறையிட்டார் .நான் தோழர் நமச்சிவாயம் அவர்களிடம் டெபுடேஷன் உத்தரவை மறுக்காதே ! இப்பொழுது SSP சந்திரசேகர் அல்ல சாந்தகுமார் நீங்கள் செல்லுங்கள் 06.09.2018 அன்று மாதாந்திர பேட்டியில் இதுகுறித்து பேசி ஒருமுடிவு எடுப்போம் என்று டெபுடேஷன் போக சொன்னது நான்தான்(அன்று நமது தோழியர் ஒருவர் தான்OFFICIATING  போஸ்ட்மாஸ்டர் ) . சிலநாட்கள் கழித்துடெபுடேஷன் முடிந்த கையோடு வந்து விடுப்புகேட்கிறார் .அன்றும்  நமது தோழியர்  தான்OFFICIATING போஸ்ட்மாஸ்டர் .அவர்கள் டெபுடேஷன் ஆர்டர் இருக்கு என்று சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல் மாலை 05.30 மணிக்கு அவராகவே ORDERBOOK எதிலும் கையெழுத்திடாமல் நமது தோழர்களிடம் நான் 05.30 மணி வரை அலுவலகத்தில் இருந்தேன் நீங்கள் தான்சாட்சி என்று சொல்லிவிட்டு செல்கிறார் .போஸ்ட்மாஸ்டர் அன்று நமது தோழியர் என்பதால் எந்தவித புகாரும் கோட்ட அலுவலகத்திற்கு கொடுக்கவில்லை .ஆனால் அந்த தோழியர் (நமது உறுப்பினர் )அவர்கள் மீதே அவர்கள் சொல்லாததையெல்லாம்  சொன்னதாக பொய் புகார் கொடுப்பதை நாம் ஏற்று கொள்ள முடியுமா ?
10.-------21.10.2018 மற்றும் 22.10.2018 விடுப்பு மறுக்கப்பட்டதாக கூறிய புகாரில் கூட 20.10.2018 அன்று போஸ்ட்மாஸ்டர் நமது மூத்த தோழியர்(நமது உறுப்பினர் ) தான் .அவர் ஒரு எறும்புக்கு கூட சிறு தீங்கு நடக்காமல் நடப்பவர் .அவர் மீது புகார் கொடுக்க நாம் அனுமதிக்கலாமா ?
 கோட்ட சங்கம் நமசிவாயத்திற்கு மட்டும் தான் செயல்படவேண்டுமா ? இல்லை ஒட்டுமொத்த ஊழியர்கள் நலனுக்காக செயல்பட வேண்டுமா ?
நமசிவாயத்திற்கு ஆதரவாக தோழர் சிவகுமாரை தவிர திருநெல்வேலி HO வில் ஒரு தோழர் அவர் செய்வது நியாயம் என சொன்னால் கோட்ட சங்கம் இன்னும் விரிவாக விவாதிக்க தயாராக இருக்கிறது 
  இப்படி நமது மூத்த குறிப்பாக பெண் தோழியர்களை குறிவைத்து புகார் கொடுத்தால் அந்த புகார் மீது கோட்ட சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது நியாயம் தானா ?
 இப்பொழுது மீண்டும் மானூருக்கு விருப்ப கடிதம் கொடுத்துவிட்டு சென்னையில் இருந்து சிபாரிசு மூலம் (கோட்ட செயலருக்கு தெரியாமல் )தான் மட்டும் டெபுடேஷன் பட்டியலில் இருந்து தப்பித்துக்கொள்ள தருணம் பார்த்து காத்து கொண்டிருக்கிறார் நம்ம நமசிவாயம் ...
   05.11.2018 அன்றும் ஒரு டெபுடேஷன் உத்தரவு .நமச்சிவாயம் சத்தமில்லால் கையெழுத்திட்டு செல்கிறார் .காரணம் அன்றும் ஒரு OFFICIATING போஸ்ட்மாஸ்டர்தான்  ஆனால் அவர் வேறு சங்கம் என்பதால் தான் எத்தனை மௌனம் .எத்தனை பணிவு .
ஆனால் இந்த இரண்டு புகார் கடிதம் குறித்து தோழர் நமசிவாயம் கோட்ட செயலர் என்ற முறையில் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொன்னது கிடையாது .முதல் கடிதம் மட்டும் அவரது நண்பரால் எனக்கு அனுப்பப்பட்டது .
    NFPE யின் வலிமையே இதுபோன்ற உறுப்பினர்களின் விமர்சனங்களை உள்வாங்கி பதிலளிப்பது தான் .அது தான் NFPE .மற்ற அமைப்புகளில்  இதுபோன்று விமர்சனங்களை வெளிப்படையாக வைக்கமுடியாது .அந்தந்த அரங்கத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும் .இருந்தாலும் இந்த வெளி அரங்க விமர்சனத்தை ஆரோக்யமானதாகவே நெல்லை NFPE கருதுகிறது .
                                            BE PROUD BEING THE MEMBER OF NFPE 
 நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment