...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, August 16, 2018

        தோழியர் ராஜேஸ்வரி SPM சமாதானபுரம் அவர்கள் இன்று பணிநிறைவு பெற்று செல்கிறார்கள் .அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
ஒரு வாழ்த்து கவிதையோடு 
விடை பெற்றிருக்கிறார்கள் 
தோழியர் ராஜேஸ்வரி 
வழக்கமாக நமது 
வாழ்த்துகள் தான் முந்தி நிற்கும் -
அவரும் ஒரு கவிஞர் என்பதால் 
நம் வேலையை சுலபமாக்கி சென்று விட்டார் 
பணி ஓய்விற்கு பிறகு 
அவரது தேடல் அர்தமுள்ளதாகட்டும் ....
அஞ்சலகம் தந்திட்ட 
மற்றுமொரு படைப்பாளி --
எனது கவிதைகளை படித்து விட்டு 
வாழ்த்தும் பல தோழர்களில் 
தோழியரும் ஒரு பங்காளி .....
உங்கள் எண்ணங்கள் சிறக்கட்டும் -
கனவுகள் கற்பனைகளாய் 
சிறகினை விரிக்கட்டும் 
புதிய உலகினில் 
சுதந்திரமாய் -பிரவேசியுங்கள் 
வாழ்த்துக்களுடன்              -----ஜேக்கப் ராஜ் ----------------





0 comments:

Post a Comment