...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 9, 2018

அன்பார்ந்த தோழர்களே !
        போனஸ் குறித்து நேற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நமக்கு எத்தனை (60 ) நாள் போனஸ் என்ற உத்தரவு இன்றோ நாளையோ வரப்போகிறது .போனஸ் குறித்து சில செய்திகளை  சென்ற ஆண்டு பதிவிட்டிருந்தேன் .அதை மறுபதிப்பாக மீண்டும் பதிவிடுகிறேன்

        போனஸ் குறித்து ஒரு  மூத்த தோழர் சொன்ன செய்தி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது .அந்த காலங்களில் தசரா நாட்கள் நெருங்க நெருங்க நாங்கள் வானொலி பெ ட்டி அருகில் இருந்து கொண்டு காலை  மற்றும் மாலை ஆகாசவாணி செய்திகளை கேட்டுத்தான் தெரிந்துகொள்வோம் .முதலாவதாக ரயில்வே ஊழியர்களுக்குத்தான் போனஸ் அறிவிப்பு வரும் .அதனை தொடர்ந்து ஓரிரு நாட்கள் கழித்துதான் நமக்கு போனஸ் அறிவிக்கப்படும் .நாங்கள் குடும்பமாக வானொலி பெட்டிக்கு அருகில் இருந்து செய்திகளை கேட்க இருப்பதுண்டு .நமக்கு இத்தனைநாள் போனஸ் என்றவுடன் உற்சாக மிகுதியால் கைதட்டி மகிழ்ந்திருக்கிறேன் . அதன் பிறகு அகிலஇந்திய தலைமைக்கு டெலிபோன் EXCHANGE தோழர்கள் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்து கொண்டு இருந்தார்கள் .பிறகு STD வசதிகள் வந்தபிறகு நிர்வாகிகள் தொலைபேசியில்நேரிடையாகவே  பேசி அந்த 
தகவல்களை நமது சங்க நோட்டீஸ் போர்டில்  எழுதி வைப்பார்கள் .அதை ஆர்வமோடு உறுப்பினர்கள்  பார்ப்பார்கள் .ஒவ்வொரு கிளை செயலர்களும் அதை ஒரு பெரிய சாதனையாகவே எழுதி வைப்பார்கள் .இந்த பின்னணியில் தான் இன்றும் நாம் அதே பார்முலா --அதே 60 நாள் என போனஸ் பெற்று வருகிறோம் .
போனஸ் சலுகை அல்ல --போனஸ் பிச்சையும் அல்ல --போனஸ் கொடுபடாத ஊதியம் -என்ற மாபெரும் தலைவர்களின் உணர்ச்சி உரை இன்னும் என் காதுகளில் ரீ ங்காரமிடுகிறது .ஆம் போனஸ்  உச்சவர ம்பின்றி பெற்றுக்கொள்ளும் காலம் வருமா
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment