...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 3, 2019

அன்பார்ந்த தோழர்களே !
   04.01.2019 அன்று (ஜனவரி 8&9 இருநாட்கள்) வேலைநிறுத்த விளக்க கூட்டம் மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது .அனைத்து தோழர்களும் விளக்க கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் .
---------------------------------------------------------------------------------------------------------------------
மாதாந்திர பேட்டி டிசம்பர் மாதம் நடைபெறவில்லை .இருந்தாலும் வருகிற 17.01.2019 வியாழன் காலை 10 மணிக்கு மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .தோழர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகள் இருந்தால் வருகிற 06.01.2019 குள் கோட்ட சங்கத்திற்கு தெரிய படுத்தவும் 
---------------------------------------------------------------------------------------------------------------------
ஒருவழியாக நேற்று விடுபட்ட பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு கீழுள்ள தோழர்களுக்கு மாலை சென்றமாதம் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டது .இன்னும் விடுபட்ட தோழர் கண்ணன் தபால்காரர் பேட்டை அவர்களது சம்பளம் குறித்தும் கோட்ட அலுவலக கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது .இன்றும் முடியவில்லை என்றால் கோட்ட சங்கம் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் .
------------------------------------------------------------------------------------------------------------------
 GDS ஊழியர்களுக்கு வருடம் 5 நாள் அவரசகால விடுப்பு(EMERGENCY LEAVE)  01.01.2019 முதல் அமுலாகிறது .
1.அவசரகால விடுப்பினை ஒரு காலண்டர் ஆண்டில் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
 2.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக இரண்டு நாட்கள் மட்டுமே அவசரகால விடுப்பு எடுத்துக்கொள்ள முடியும்.
3. அவசரகால   விடுப்புகளுக்கு பதிலிகள் (SUBSITUTE ) நியமிக்கப்படக் கூடாது. இரண்டு GDS ஊழியர்கள்(BPM- ABPM ) உள்ள அலுவலகங்களில் ஒருவர் விடுப்பு எடுத்தால் மற்றவருக்கு COMBINED DUTY போட வேண்டும். தனிநபர் அலுவலகம் எனில் பதிலி நியமிக்கலாம்.
 4. இதனை அடுத்த ஆண்டு அவசர விடுப்பு கணக்கில் சேர்க்கவோ(Carry Forward ) அல்லது பணமாக்கி(Encashment) கொள்ளவோ முடியாது.
 5. அவசரகால  விடுப்பினை எடுப்பதற்கு BPM ஊழியர்கள் கோட்ட அலுவலகத்தின்(DO) அனுமதியையும் BPMதவிர்த்த மற்ற GDSஊழியர்கள் உட்கோட்ட அதிகாரி/முதுநிலை அஞ்சல் அதிகாரி/அஞ்சல் அதிகாரி  அனுமதியையும் பெற வேண்டும்.
6.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் அவசர விடுப்பின் முன்பு அல்லது  பின்பு இருப்பின் அவைகள் அவசரகால விடுப்பிலிருந்து கழிக்கப்படாது.
 7.இரண்டு நாட்களுக்கு மேல் அவசர விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அவர் விடுப்பு  எடுத்த நாட்கள் அவருடைய Paid leaveலிருந்து கழிக்கப்படும். Paid Leave இல்லாத பட்சத்தில் Unauthorised Absent ஆக கருதப்பட்டு அவருக்கு TRCA வழங்கப்படாது.
8.அரை நாள் அவசர கால விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.
9.PUT-OFF DUTY  உள்ள GDS ஊழியர்களுக்கு இந்த விடுப்பு வழங்கப்படாது.

10. அவசரகால  விடுப்பு அளிக்கும் அதிகாரிகள் அவசரகால விடுப்புகள் குறித்த தனிப்பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
                             நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment