...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 8, 2019

                 போராடும் தோழர்களுக்கு வீர வாழ்த்துக்கள் 
வரலாற்று சிறப்புமிக்க இரண்டுநாள் வேலைநிறுத்தம் சிறப்பாக தொடங்கியது . திருநெல்வேலி RMS யில் திட்டமிட்டபடி நள்ளிரவு 12.00 மணிக்கு வேலைநிறுத்தம் துவங்கியது .முன்னதாக திருநெல்வேலி PSD 100 சதம் என்ற வெற்றியை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது .பல இடங்களில் போஸ்ட்மாஸ்டர் கேடர் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டனர் .நெல்லை MMS அனைத்து ஓட்டுனர்களுக்கு வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர் .அம்பாசமுத்திரம் முழுவதும் போராட்டம் பரவியது .நெல்லை பாளை பகுதிகளில் அனைத்து டவுன் SOS மூடப்பட்டன .புறநகர் பகுதிகளில் நமது தோழர்கள் பணியாற்றும் அலுவலகங்களில் 99 சதம் போராட்டம் நடக்கிறது .கோட்ட அலுவலக ஊழியர்களும் சிறப்பான ஆதரவை தந்திருக்கிறார்கள் .
                                   வீர திருமகள் தோழியர் ராணி அன்பரசி 
இந்த மாதம் ஜனவரியில் பணிஓய்வு பெறவிருக்கும் மேலப்பாளையம் பஜார் SPM அவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்கிறார்கள் .தோழியரின் மன உறுதிக்கும் போராட்ட குணத்திற்கும் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                      இந்த புனித போராட்டத்தில் அணிவகுத்த அனைத்து தோழர் தோழியர்களுக்கும் நெல்லை NFPE தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .
                            இன்று காலை 10 மணிக்கு கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .வாய்ப்புள்ள தோழர் /தோழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                   போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                      

0 comments:

Post a Comment