...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 29, 2016

                         அஞ்சல் நான்கின் மாநில மாநாடு
தமிழ்மாநில அஞ்சல் நான்கின் 30 வது மாநில மாநாடு 29.12.2016 மற்றும் 30.12.2016 ஆகிய நாட்களில் திண்டிவனத்தில் நடைபெறுகிறது .மாநாட்டில் கலந்துகொள்ள விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்டசெயலர் தோழர் SK .பாட்சா அவர்களிடம் 30.11.2016 குள் தெரிவிக்கவும் .மாநில மாநாட்டு நன்கொடை புத்தகங்களை வருகிற 05.12.2016 குள் பிரித்த தொகையுடன் கொடுக்கவும் .
                               டிசம்பர் 15 பாராளுமன்றபேரணி 
  மத்தியஅரசு ஊழியர்கள்  மகா சம்மேளனம் சார்பாக புதுடெல்லியில் நடைபெறும் பேரணிக்கு  கோட்டத்தில் இருந்து ஐந்து தோழர்கள் கலந்து கொள்கிறார்கள் .தோழர்கள் வண்ணமுத்து ,அழகுமுத்து ,நமச்சிவாயம் ,குருசாமி மற்றும் பாட்சா ஆகியோர் செல்கிறார்கள் .புறப்படுமபோது தொடர்வண்டியிலும் வரும்பொழுது வானூர்தியிலும் அவர்கள் முன்பதிவு செய்திருக்கிறார்கள் .அவர்களின் தொழிற்சங்க பயணங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறோம் .
                            போஸ்டல் JCA சார்பாக ஆர்ப்பாட்டம் 
போஸ்டல் JCA சார்பாக வருகிற 07.12.2016 அன்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது 

                                               வாழ்த்துக்களுடன்  
  SK .ஜேக்கப் ராஜ்                                   SK .பாட்சா 

0 comments:

Post a Comment