...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 27, 2018


  அன்பார்ந்த தோழர்களே !                           

Justice delayed is justice denied

  01.01.2004 க்கு முன்பு நடந்த தேர்வு -அதனுடைய செலேச்சன் ப்ராசஸ் தாமதத்தால் 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும்( BSF ஊழியர்களுக்கு )பழைய ஓய்வூதியம் தான் பொருந்தும் என்றும் நிர்வாக காரணங்களால் ஏற்படும் காலதாமத்தை வைத்து அவர்களை புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்  Ministry of Home Affairs/Border Security Force  உத்தரவு பிறப்பித்துள்ளது .இது நாம் ஏற்கனவே 2002 மற்றும் 2003 காலிப்பணியிடங்களுக்கு நடந்த தபால்காரர் /MTS நியமனங்களுக்கு பழைய ஓய்வூதியம் தான் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தி கொண்டிருக்கும் வழக்கிற்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் .நெல்லை கோட்டம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் எட்டு தோழர்களில் இரண்டு தோழர்கள் ஒருவர் பணியின் போதும் மற்றொருவர் பணிஓய்வு பெற்ற சிறிது நாட்களுக்குள் இறந்து போனார்கள் என்ற நிலையில் இந்த வழக்கில் விரைவில் நல்லதொரு உத்தரவு வர காத்திருக்கிறோம் .தாமதமாகும் தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்ற நியதியை புரிந்துகொண்ட நிர்வாகம் விரைந்து உத்தரவுகளை வழங்கிடவேண்டும் 
------------------------------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் /MTS தோழர்கள் எழுத்தர் தேர்வு எழுதுபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 01.10.2018 முதல் தினமும் மாலை 5 மணிக்கு பாளையம்கோட்டை சமாதானபுரத்தில் (முன்னாள் ASP திரு .பாலசுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் ) நடைபெறுகிறது .விருப்பமுள்ள தோழர்கள் இந்த வகுப்புகளில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம் .சுமார் 55 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .மேலும் விபரங்களுக்கு திரு .பாலசுப்ரமணியன் Retd ASP (OD )94421 49339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment