...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 22, 2018

                                 நெல்லை கோட்ட செய்திகள் 
IPPB கணக்குகளை பிடிக்க  தபால்காரர்களையும் /GDS ஊழியர்களையும் இலாகா வழிகாட்டுதலுக்கு புறம்பாக வற்புறுத்தும் அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து தமிழக அஞ்சல் நான்கு சங்கம் சார்பாக 28.09.2018 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது .இன்று IPPB கெடுபிடி பாளையில் தானே நமக்கில்லை என்றில்லாமல் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் 
------------------------------------------------------------------------------------------------------------------
 அஞ்சல் நான்கின் கோட்ட பொறுப்பு செயலராக தோழர் T .புஷ்பாகரன் போஸ்ட்மேன் பாளை அவர்கள் 22.09.2018 முதல் 06.10.2018 வரை பணியாற்றுகிறர்கள் .அஞ்சல் நான்கின் கோட்டசெயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் 15 நாட்கள் சொந்த விடுப்பில் சென்றுள்ளதால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று 21.09.2018 அன்று தூத்துக்குடியில் நடந்த அஞ்சல் நான்கின் தென்மண்டல கோட்ட செயலர்கள் கூட்டத்தில் நமது அஞ்சல் நான்கின் பொறுப்பு செயலர் தோழர் T .புஷ்பாகரன் அவர்கள் பங்கேற்று கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள் .அவர்களுடன் தோழர்கள் ஜேக்கப் ராஜ் C.வண்ணமுத்து சாகுல் தோழர் KG.குருசாமி ஆகியோர் பங்கேற்றனர் .
-----------------------------------------------------------------------------------------------------------------



0 comments:

Post a Comment