...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, November 12, 2016

                        நாங்கள் --நாங்கள் தான் 
விலாசம் தேடி சென்று சேவை செய்த  அஞ்சல் துறையை --இன்று 
விலாசம் விசாரித்து  வரும்   மக்கள் கூட்டம் -
 வெறும் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல --
உத்தரவாதம் --உண்மை -உதவி --என பன்முக சேவையில் நமது  
துறை மிளிர்வதை பார்க்கிறோம் 
விரைவான பண பரிமாற்றம்  -கனிவான சேவை 
முகம் சுளிக்காத ஊழியர்கள் -முணுமுணுக்காத உள்ளங்கள்   -
எவ்வளவு என்றாலும் சளைக்காமல் வாங்கும் தோழர்கள் 
 இவைகள் அஞ்சலக ஊழியர்களின் அடையாளங்கள் ---
 பத்திரிகைகளும் --மீடியாக்களும் மற்றவைகளை ஒப்பிடுகையில் அஞ்சலக சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் .
இன்னும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் வரவில்லை -
செல்வந்தர்களை காணோம்  -அரசியல்வாதிகளை பார்க்கவில்லை 
பெரு முதலாளிகள் எட்டி பார்க்கவில்லை -- ஆனாலும் 
பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது - 
பொதுமக்களால் அஞ்சலகம் நிரம்பி வழிகிறது --எங்கள் 
மனமெல்லாம் குதூகலிக்கிறது -ஆனாலும் ,ஆனாலும் 
அரசு ஊழியர்கள் அவ்வளவாக தென்படவில்லை 
அவர்கள் மட்டும் தான் தவணைகளில் காலம் தள்ளினாளும்  --
வருமான வரியை  ஏய்காத  உண்மை தேச பக்தர்கள் 
மத்திய  அரசே !இனியாவது எங்களை ஏய்காதே !
நாங்கள் --நாங்கள் தான் --எங்களுக்கென்று 
ஒதுக்கியதும் இல்லை ! பதுக்கியதும் இல்லை !
இருந்தால் தானே பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு !
              தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 

2 comments:

  1. மிக அருமையான கவிதை ஜேக்கப் ராஜ் சார் .
    C. Sasikumar, Srirangam

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete