...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 1, 2018

                                             ஒரு சேர காப்போம்
அதிகாரவர்க்கத்தின் கழுகு பார்வை
அஞ்சல் துறை மீதும் விழுந்ததெப்போ ?
ஆறு கூறாக்கி அழித்திடவும்
ஆசை இங்கு உதித்ததெப்போ ?
அரசாங்கத்தின் நியாயத்தராசின் முட்கள்
சேவை பக்கம் சாயாத மர்மம் என்ன ?
உலக அதிசயத்தையே அசைத்து பார்த்தவர்கள்
அஞ்சல் துறையையா விட்டு வைக்க போகிறார்கள்
சிறுக சிறுக சேர்த்த கணக்குகள்
வங்கி வாசல்களில் வீசப்பட்டுவிட்டன
வங்கிகளுக்கு விரிவு படுத்திய பின்பும்
வரிசை ஒன்றும் குறைந்து போய்விடவில்லை
முதுகெலும்பு வளைந்து ஒடிந்தாலும்
முனங்கல்களோடு முடித்து கொள்கிறோம்
வியர்வையோடு உதிரம்  வடிந்தாலும் -தானாய்
வேதனை சரியாகும் என்று சகித்து கொள்கிறோம்
வாங்கிய சில நாட்களிலே
வாயை பிளக்கும் பிரின்டர்கள்
உத்தரவாதம் முடியும் முன்பே
உயிரிழக்கும் பேட்டரிகள்
வந்துவந்து போகும் இண்டர்நெட்டுகள்
வந்துகொண்டே இருக்கும் ரிப்போர்டுகள்
தபால்துறையில் வடமாநிலத்தவர்கள்
தமிழில் சாதிக்கிறார்கள்
தமிழ் வளர்ந்திருப்பதாய் -இங்கே
போதிக்கிறார்கள்
பொங்க வேண்டியவர்களே இங்கு
பொறுமை காப்பது புரியவில்லை
தடுக்க வேண்டியவர்களே -இன்று
தடுமாற காரணம் என்ன ?
இடிந்து விழும் இலாகாவையும்
இழந்து வரும் இயக்க பெருமையையும்
ஒருசேர காக்க புறப்படுவோமஅனைவருக்கும் 
புத்தாண்டு வாழ்த்துக்கள் ----ஜேக்கப் ராஜ் நெல்லை 



0 comments:

Post a Comment