...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 30, 2018

GDS சங்க நெல்லை கோட்ட செயலர் தோழர் காலப்பெருமாள் அவர்களின் உடல் தகனம் -இறுதி அஞ்சலியில் பெருந்திரளாக தோழர்கள் பங்கேற்பு 
28.01.2018 அன்று சாலை விபத்தில் மரணமடைந்த தோழர் காலப்பெருமாள் அவர்களின் இறுதிச்சடங்கு விஜயநாராயணம் அருகே அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது .அதனை தொடர்ந்து அஞ்சலி கூட்டம் நடந்தது .நமது முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் திரு .VPC -ASP கள் திரு பொன்னையா திரு குமரன் திரு செந்தில் குமார் AIGDSU தமிழ்மாநில செயலர் தோழர் இஸ்மாயில் அஞ்சல் மூன்றின் மாநில உதவி தலைவர் தோழர் ஐயம்பெருமாள் SC /ST சங்க கோட்ட செயலர் தோழர் சுப்பிரமணியன் SBCO மாநில அமைப்பு செயலர் தோழர் செல்வபாரதி அவர்களும் கலந்துகொண்டனர் .தொலைபேசி மூலம் தனது இரங்கலை தெரிவித்த அஞ்சல் மூன்றின் மாநில செயலர் தோழர் JRஅண்ணன் காந்தி முத்துசாமி LS ஜான் பிரிட்டோ GDSஅகிலஇந்திய பொதுச்செயலர் தோழர் மஹாதேவையா அகிலஇந்திய தலைவர் தோழர் ராஜாங்கம் நமது மாநிலதலை வர் தோழர் செல்வ கிருஷ்ணன் வாட்ஸாப்ப் மூலம் தங்களது இரங்கலை பதிவிட்ட அனைத்து அஞ்சல் மூன்று அஞ்சல் நான்குகோட்டசெயலர்களுக்கும் நெல்லை NFPE தனது நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறது மேலும் முதல்நாள் இரவுமுதல் மறுநாள் வரை இறுதிச்சடங்கிற்க்கான உதவிகளை உடன் இருந்து செய்த அஞ்சல் நான்கின் கோட்டசெயலர் தோழர் பாட்சா அவரது சகோதரர் தோழர் ஜாபர் ஷா (அலி ஜூவல்லர்ஸ் ) அவர்களுக்கும் குடும்பத்தார் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .குடும்பத்தலைவனை இழந்துதவிக்கும் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு எல்லாம்வல்ல இறைவன் வழிகாட்டுவாராக !









0 comments:

Post a Comment