அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*கோவிட் -19 இரண்டாவது பரவலை தொடர்ந்து நேற்று நமது CPMG அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதலை பார்த்திருப்பீர்கள் .அனைத்து அஞ்சலகங்களிலும் மதியம் 2 மணிவரை கவுண்டர் செயல்படலாம் என்பதனால் யாருக்குநன்மை என தெரியவில்லை .
*திருநெல்வேலி மேற்கு அஞ்சலகத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கோவிட் பாதிப்பு வந்தபின்பும் குறைந்தபட்ச SANITAISAR வசதிகள் எதுவும் செய்துகொடுக்காமல் மீண்டும் மீண்டும் ஊழியர்களை டெபுடேஷன் அனுப்புவதை நிர்வாகம் தவிர்த்து குறைந்தபட்சம் ஒருநாள் அலுவலகத்தை மூடிட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
*மாநில சங்கத்தின் தீவீர முயற்சிக்கு பின் மாநிலம் முழுவதும் ஆதார் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன .மாநில செயலருக்கு நன்றிகள் .
*தலைவர் KVS அவர்களின் விதி அறிவு களஞ்சியம் நூல் நமது கோட்டத்திற்கு வந்த 50 நூல்களும் விற்றுமுடிக்கப்பட்டுவிட்டன .இன்னமும் நிறைய தோழர்கள் நூல் வேண்டும் என கேட்கிறார்கள் .தேவைப்படுவோர் தங்களது பிரதிக்கு முன்பதிவு செய்துகொள்ளுங்கள் .அதற்கேற்ப மாநிலச்சங்கத்திடம் நூல்களை பெற்று விரைவில் அனுப்பப்படும் .
*புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தினை கோட்ட நிர்வாகத்திடம் வழங்கிட ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .
*நமது தொடர் முயற்சியின் காரணமாக பணகுடி அஞ்சலகத்திற்கு ஒரு PA ATTACH செய்யப்பட்டுள்ளார்கள் .சற்று தாமதம் ஆனாலும் நிலைமையை புரிந்துகொண்டு உத்தரவிட்ட கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..
*சென்னையில் இருந்து தபால்காரராக பிறகு எழுத்தராக பதவி உயர்வு பெற்ற தோழியர் அன்புச்செல்வி PA அம்பாசமுத்திரம் அவர்களது CGHS சலுகை தொடர கோட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது .ஒருசில விளக்கங்களை பெற்றபின் இந்த முடிவுகளை நிர்வாகம் எடுத்துள்ளது .கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
Staff ellorum udalnilai sari illamal poikondu irukurathu. Aanal athai patriya entha oru sinthanayum illamal innum roaster murai amal paduthavillai. Sanitizer illai. Pathukappu ubakaranangal illai. Moththathil panipuriyum uliyargalin uyitrukku pathukappu illai. Union enna seiya pogirathi itharkku.
ReplyDelete