...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 30, 2017

                   பணிநிறைவு பெறும் தோழர்களை வாழ்த்துகிறோம் 
                            தோழியர் மீனா APMACS நாகர்கோயில் 
அன்பு தோழியர் மீனா வாழ்க !
அஞ்சல் மூன்று நெல்லையில் 
இரும்பு பெண்மணியாய் இருந்தவரே !
அஞ்சா நெஞ்சன் அணியினில் 
ஜான்சி ராணியாய் மிளிர்ந்தவரே !
எங்களுக்கு காக்கும் தெய்வமாகவும் 
எதிரிகளை (வாதத்தில்) 
தாக்கும் தெய்வமாகவும் அவதரித்தவரே !
மாநாடுகளில் அமைப்பு நிலை விவாதத்தில் 
தம்பிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரே!
தொழிற்சங்க தேர்தல்களில் எங்கள் புகழ் பரப்பும் 
வானம்பாடியாய் வலம் வந்தவரே !
சோதனை நேரங்களில் எங்களுக்கு பலம் கூட்டியவரே!
அச்சத்தை அறியாதவர் --அச்சுறுத்தல்களை 
துச்சமென நினைத்தவர் 
உதவி செய்வதிலும் உவகை கொண்டவர் 
உரிமை காத்திட உணர்வை ஊட்டியவர் 
எல்லா தலைவர்களை போல் நீங்களும் பணி ஓய்வுக்கு பின் வெறுமனே செல்லாமல் அருமை புதல்வன் சிவகுமாரை
எங்களுக்கு (NFPE ) தத்து கொடுத்து சென்றவரே!
கணபதி -மீனா தம்பதிகளின் பெருமை என்றும் நிலைத்திட வாழ்த்துகிறோம் !வணங்குகிறோம்--- SKJ 
                 
    அஞ்சல் நான்கின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் வாழ்க !
   படைக்கஞ்சாத தோழர் --
  பார்வைகளில் பண்ணீரையும் --
  பழகுவதில் பாசத்தையும் வெளி கொண்டு வந்தவரே !
 உன் பின்னே --இத்தனை படை நின்றும் 
 கர்வம் இல்லா மாமனிதர் 
 களங்கம் சொல்ல முடியாதவர் -பிரச்சினைகளில் 
கொதிக்கும் --நெஞ்சம் -அனுகுவதில் 
குழந்தை உள்ளம் 
திண்டிவனமாநில மாநாட்டை திறம்பட நடத்தியவர் 
மாநில தலைவர் என்ற மமதை இல்லாதவர் 
அணிகளுக்கு அப்பால் என்னை ஈர்த்த தலைவர்களில் இவரும் ஒருவர் -வாழ்க அண்ணன் பன்னீர் --SKJ 
 
  நெல்லை கோட்ட தோழர் விஜயகுமார் SPM மாவடி அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் 31.05.2017 
நேரம் மாலை 6 மணி 
இடம் அருணா மண்டபம் -களக்காடு 
 அனைவரும் அழைக்கிறோம் --நெல்லை NFPE 

1 comment:

  1. Best wishes happy retired life
    To Tmt.Meena ganapathy.APM.
    Ponnuraj k
    1/6/17

    ReplyDelete