...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 6, 2017

தலைவர் A.G.P. அவர்களின்
85 ஆவது பிறந்த நாள் நிகழ்வு
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தமிழக அஞ்சல் நான்கு மாநிலச் சங்கத்தின் சார்பில் முது பெரும் தலைவர் தோழர். A.G.P. அவர்களின் 85 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி 5.9.2017 மாலை 6.00 மணி துவங்கி சென்னை திருவல்லிக்கேணி அஞ்சலக திறந்த வெளி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல முக்கிய தலைவர்கள்/ நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசியும் ஆசியும் பெற்றனர்.
தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயவர் தோழர். J.R., மாநில நிதிச் செயலர் தோழர். A. வீரமணி, முன்னாள் மாநிலச் செயலர் தோழர். V. பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினைத் தெரிவித்தனர். முன்னதாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் வடித்தெடுத்த கவிதை தோழர் முன்னாள் மாநிலசெயலர் பார்த்திபன் அவர்களால் வாசிக்கப்பட்டு தோழர் AGP அவர்களுக்கு நினைவு பரிசாக மெருகூட்டப்பட்டு வழங்கப்பட்டது .பம்பரமும் சுற்றிய பின்பு 
ஓய்வு பெறும் -இவரோ 
படுகிழமாய் போன பின்பும் 
பம்பரமாய் சுற்றி வந்தார் -என்ற 
பெரியாரின் புகழுக்குரியவர் 
எதிரிகளின் தலையெல்லாம் 
முற்றிய கதிர்போல் சாய்வதற்கு 
என் அண்ணன் கற்றிருந்தார் 
முத்தமிழை ஆள்வதற்கு என்ற 
அண்ணாவின் பெருமைக்குரியவர் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கு நெல்லை அஞ்சல் மூன்று -அஞ்சல் நான்கு சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
அன்புடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை


0 comments:

Post a Comment