...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 18, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                             கோட்ட சங்க அவசர செயற்குழு கூட்டம் 
நாள் 20.07.2019   நேரம் மாலை 6 மணி 
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர் T .அழகுமுத்து அவர்கள் கோட்டத்தலைவர் 

பொருள் : 1. ஞாயிறு அன்றும் ஆதார் பணிகள் செய்திட உத்தரவு     
                        2.இலாகா விதிகளுக்கு  முரனாக    அட்டாச்மெண்ட்                                          என்ற   பெயரில் இடமாறுதல்கள் 
                         3.LRPA வை கோட்ட அலுவலகத்தில்   நிரந்தர பிரிவில்                                           பணியாற்றிட அனுமதிப்பது 
                          4.MMS ஊழியர்களை மதுரைக்கு MMS மதுரை நிர்வாகம் 
                           கேட்காத நிலையிலும் அனுப்பிவைப்பது 
                          5.DGL/LRPA பட்டியல் திருத்தங்களை விரைந்து  
                           முடிப்பது 
                         6. இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )

             நமது கோட்டத்தில் ஒரு அசாதாரண சூழல் உருவாகியிருக்கிறது .மேலதிகாரிகள் பிறப்பித்த வாய்மொழி உத்தரவை ஏற்று ஞாயிற்று கிழமைகளிலும் ஆதார் பணிசெய்திட பாளையம்கோட்டை யில் உத்தரவு -இதுகுறித்து நமது மாநிலசெயலர் அவர்கள் மூலம் CPMG அலுவலகத்தில் விசாரித்ததில் எங்கெல்லாம் NPO செயல்படுகிறதோ அந்த தலைமை அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு பிரிவு தொடங்கதான் சொல்லப்பட்டது என்றும் பாளையம்கோட்டையில் BPC இரவு 8 மணிவரை செயல்படுவதை இவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள் என்ற தகவல்கள் நமக்கு கிடைத்திருக்கிறது .மேலும் மதுரைக்கு வந்த நமது CPMG அவர்களும் சீனியர் போஸ்ட்மாஸ்டர்உள்ள அலுவலகங்களில் ஆதார் பணிகளை செய்யலாம் என்ற ஆலோசனைகளை மட்டும் தெரிவித்துள்ளார்கள் .ஆகவே பாளையில் தொடங்கப்பட்ட ஞாயிறு பணிகளை ரத்து செய்திடவேண்டும் 
  2. இலாகா விதிகளுக்கு முரணாக பல தோழர்கள் ஒவ்வொரு அலுவலகத்தில் அட்டாச் செய்யப்பட்டுள்ளார்கள் .விளைவு அந்த அலுவலகங்களுக்கு வேறு அலுவலகத்தில் இருந்து டெபுடேஷன் .மேலும் வேலைப்பளு அதிகமுள்ள மூன்றடைப்பு அலுவலகத்தில் இருந்து பாளையங்கோட்டைக்கு ஊழியர்கள் அட்டாச் செய்வது ஏன் ?யாருக்கோ உதவி செய்வதாக மூன்றடைப்பு  போன்ற வேலைப்பளு அதிகமுள்ள அலுவகத்தில் தனி ஒரு ஆள் பணி செய்திடுவது .நியாயமா ?
 3. LRPA ஊழியர்களை கோட்ட அலுவகத்தில் நியமிக்கக்கூடாது என்ற இலாகா விதியை மீறி தொடர்ந்து LRPA வை DO வில் வைத்துக்கொண்டால் பாளையில் ஒரு LRPA மட்டுமே இருக்கிறார் அதனால் தொடர்ந்து பாளையங்கோட்டை யில் நிரந்தர சீனியர் ஊழியர்கள் அலைக்கழிக்க படுகிறார்கள் .
 4.நமது கோட்டத்திற்கு வரவேண்டிய RULE 38 ஊழியர்கள் இன்னும் முழுமையாக வந்துசேரவில்லை .இதுகுறித்தும் மாநில சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு RULE 38 ஊழியர்கள் அனைவரையும் விரைந்து நமது கோட்டத்திற்கு வந்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் .
5. MMS யில் இரண்டு வேன் களை ஆயுட்காலம் முடிவடைந்ததை காரணம் காட்டி மதுரைக்கு அனுப்பிவைத்ததும் அங்கே நமது  ஓட்டுனர்களை மதுரை MMS நிர்வாகம் கேட்காமலே நாமாகவே அவர்களை மதுரையில் இருக்கட்டும் என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் 
                தோழர்களே ! மேற்கண்ட பிரச்சினைகள் போக மீதமிருக்கும் பிரச்சினைகளைம் செயற்குழுவில் விவாதித்து வருகிற 21.07.2019 அன்று அம்பாசமுத்திரம் கிளை மாநாட்டிற்கு வருகிற நமது மாநிலசெயலர் அவர்களிடம் ஒரு மெமோரண்டம் கொடுத்து வருகிற திங்கள்கிழமை PMG அவர்களை சந்தித்து நமது கோட்ட பிரச்சினைகளை விவாதித்து தீர்வு கண்டிட அனைவரும் தங்களின் 
மேலான கருத்துக்களை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
          ஒன்றுபட்ட போராட்டம் -ஒன்றே நமது துயரோட்டும் .
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment