...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, July 22, 2019

                          அம்பை கிளையின் 33 வது கிளை மாநாடு 
  அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்றின் கிளை மாநாடு 21.07.2019 அன்று அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து சிறப்பாக  நடைபெற்றது .மாநாட்டில் நமது மாநில தலைவர் 
தோழர் செல்வ கிருஷ்ணன் மண்டலச்செயலர் தோழர் K .சுப்பிரமணியன் நெல்லை கோட்டசெயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஓய்வூதியர் சங்க மாநில உதவிசெயலர் தோழர் S .தியாகராஜன் உள்ளிட்ட முன்னனி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்கள் .இறுதியாக மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக 
தோழர் R .கண்ணன் தலைவராகவும் தோழர் தியாகராஜ பாண்டியன் செயலராகவும் தோழியர் காளீஸ்வரி அவர்கள் நிதிச்செயலராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள் .புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் நெல்லை கோட்டசங்கத்தின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                நேற்றைய மாநாட்டில் தோழர்களின் விருப்பத்தின்படியே நெல்லைக்கு -அம்பைக்கும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகரித்துள்ளது .ஊழியர்களின் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என்ற முடிவுக்கு மாநாட்டின் வெற்றி செய்திதான் சாட்சியாகும் .
இந்த வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கொட்ட செயலர் அஞ்சல் மூன்று நெல்லை 

0 comments:

Post a Comment