...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 25, 2020

அன்பிற்கினிய தோழர்களே ! தோழியர்களே !
                           இன்று பிற்பகல் முதல் அஞ்சல் வாரியத்தின் 25.03.2020 தேதியிட்ட உத்தரவை குறித்து விவாதித்து வருகிறோம் .இதுகுறித்து நமது கோட்ட சங்கம் சார்பாக நமது மாநில /மண்டல /அகிலஇந்திய தலைவர்களிடம் பேசிவருகிறோம் .நமது கோட்ட சங்கம் சார்பாக நமது தோழர்கள் அஞ்சல் எழுத்தர் ,தபால்காரர் .MTS.மற்றும் GDS ஊழியர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் 
1.ஏற்கனவே நாம் 31.03.2020 வரை விடுப்பு (எதாவது ஒருவகை ) விடுப்பு விண்ணப்பித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து முறைப்படி RELIVE ஆகியிருக்கிறோம் அல்லது RELIVE செய்யப்பட்டிருக்கிறோம் .
2.நேற்றைய நமது கோட்ட அலுவலக உத்தரவு படி தலைமை அஞ்சலகம் தவிர அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
3.[பாரத பிரதமர் 21 நாட்கள் தனித்திருக்க சொல்லியிருக்கிறார் .
.4..நமது மாநில அரசும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது 
5.நோயின் தாக்கம் குறித்த செய்திகள் கவலை அளிக்கும் விதத்தில் வந்துகொண்டிருக்கிறது 
6.நமது அகிலஇந்திய சங்கம் சார்பாக நாளை 11 மணிக்கு இலாகா முதல்வருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது .
   இந்த பின்னணியில் நமது ஊழியர்கள் அலுவலக பணிக்கு கோட்ட நிர்வாகத்தால் அழைக்கப்பட்டால்  யாரும் செல்லவேண்டாம் .தனிப்பட்ட முறையில் IP /ASP என யார் தொலைபேசியில் அழைப்புவிடுத்தாலும் நிராகரியுங்கள் ..
இது நமது உயிர் மட்டும் சம்பந்தபட்ட பிரச்சினையல்ல --சமூக பிரச்சினை .பாரத பிரதமரின் அழைப்பை ஏற்று தனித்திருப்போம் நாட்டை பாதுகாப்போம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment