...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 6, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                               முக்கிய செய்திகள் 
நமது கோட்ட சங்கம் சார்பாக நாம் கொடுத்த பிரச்சினைகளின் மேல் உடனடியாக கவணம் செலுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடிதங்களை எழுதி வலியுறுத்தும் மாநிலச்சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
1..நமது கோட்டத்தில் இருந்து LSG பதவி உயர்வினால் வெளிக்கோட்டங்களுக்கு அனுப்பப்பட்ட 12 ஊழியர்களையும் மீண்டும் நமது கோட்டத்திற்கே RE ALLOTMENT செய்திடக்கோரி மதுரை PMG அவர்களுக்கு கடிதம் மாநிலசங்கத்தால் அனுப்பப்ட்டுள்ளது .
2.திருநெல்வேலி PSD OA பதவிகளை விரைந்து நிரப்பிட கோரி தென்மண்டல PMG அவர்களுக்கு 26.02.2020 அன்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது 
3.LSG இடமாறுதலில் மாற்றம் கேட்டு மேல்முறையிடு செய்த தோழர் ரமேஷ் PA சுத்தமல்லி அவரது விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி 02.03.2020 அன்று மாநிலசங்கத்தால் மதுரை PMG க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது 
4.NFG இடமாறுதலில் திருநெல்வேலி போஸ்ட்மாஸ்டர் திரு .கடற்கரையாண்டி அவர்களின் உத்தரவை ரத்துசெய்துவிட்டு அவரை திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திலே NFG ஆக தொடர்ந்திட CPMG அவர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது 
5.நமது முன்னாள் கோட்ட செயலரும்  PSD மேனேஜருமான அண்ணன் R.ஹரிஹரகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனைகளை ஏற்று ஏழாவது ஊதியக்குழு உத்தரவு படி MACP  பதவி உயர்வு பெற்றவர்கள் 01.07.2017 முதல் பதவிஉயர்வை ஏற்றுக்கொள்வதாக கொடுத்த OPTION அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது தவறு என்றும் கொடுக்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்திட  ஆடிட் அலுவலகம் மாநிலத்தில் பலகோட்டங்களுக்கு போட்ட  உத்தரவு தவறு என மிக நீண்ட கடிதத்தை CPMG அவர்களுக்கு 02.03.2020 அன்று எழுதியுள்ளது .
                           பொதுவான கோரிக்கைகளில் மாநில சங்கம் 
1.NFG பதவி உயர்வை CR அமுலான 27.05.2016 அமுல்படுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் என நமது மதியசங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .
2.தென்மண்டலத்தில்  நிரப்பப்படமால் உள்ள HSG II பணியிடங்களில் 
மூத்த LSG  ஊழியர்களை கொண்டு நிரப்பிட ( அஞ்சல் வாரிய உத்தரவு 05.12.2018 படி உயர்த்தப்படாத HSG II பதவிகளில் ) சென்னையை போல் நிரப்பிட மண்டல நிர்வாகத்திற்கு வலியுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .
                             இதுபோன்ற தனி ஊழியர்களின் நலனிலும் பொது பிரச்சினைகளிலும் தயங்காமல் தளராமல் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் பேரியக்கமாம் NFPE என்பதில் பெருமைகொள்வோம் .
குறிப்பு .நேற்று நமது கோட்ட சங்கத்தால் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் ஆர்ப்பாட்டம் தேதி 10.03.2020 என்று எடுத்துக்கொள்ளவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment