...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 15, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                        ஊரடங்கு மேலும் 03.05.2020 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதை அறீவீர்கள் .ஊரடங்கு நீட்டிப்பிற்கு பிறகு நமது மாநில /மண்டல நிர்வாகத்திடமிருந்து புதிதாக எந்த வழிகாட்டுதல்களும் வரவில்லை .பெரிய அலுவலகங்களில் ரோஸ்டர் முறை பின்பற்றப்படுகிறது .தொலைதூர ஊழியர்கள் பக்கத்துக்கு அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதிக்கப்பட்டுள்ளனர் .விடுப்பில் உள்ளவர்கள் /விடுப்பை நீட்டிக்க நினைப்பவர்கள் உரிய நேரத்தில் விடுப்பு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கவும் .இதற்கிடையில் C மற்றும் B பிரிவு அலுவலக SPM  தோழர்கள் மற்ற கோட்டத்தில்
 (தஞ்சாவூர் )உள்ளது போல் தங்களுக்கும் ஒருநாள்விட்டு ஒருநாள் அலுவலகம் வருவதற்கு நமது கோட்டத்திலும் உத்தரவை பெற்றுத்தர வேண்டும் என கோரி வருகின்றனர் .நேற்று இதுகுறித்து நமது SSP அவர்களிடமும் நமது ASP (HOS ) அவர்களிடமும் பேசியிருக்கிறோம் .நமது SSP அவர்கள் 13 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் சிறப்பு அனுமதிபெற்று விடுப்பில் சென்றிருக்கிறார்கள் .இருந்தாலும் இன்று இதுகுறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்ற தகவல்களை தெரிவித்திருக்கிறார்கள் .தகவல்கள் கிடைத்தவுடன் தங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment