...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 25, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                கடந்த 20.04.2020 முதல் ஊரடங்கு சற்று தளர்வதை முன்னிட்டு அஞ்சலகங்கள் முழுமையாக செயல்படவேண்டும் அனைத்து ஊழியர்களும் பணிக்கு செல்லவேண்டும் ரோஸ்டர் முறை ரத்து அவரவர் சொந்த அலுவலகங்களில் தான் பணியாற்றிடவேண்டும் என்ற இறுக்கமான ஒருஉத்தரவை மாநில நிர்வாகம் பிறப்பித்ததை நாம் அறிவோம் .இந்த சூழ்நிலையில் நமது மாநிலச்சங்கம் குறிப்பாக நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களின் இடைவிடாத முயற்சியினால் CPMG அவர்களை இரண்டுமுறை  சந்தித்து விவாதித்து தொடர்ச்சியான உத்தரவினை பெற்றுத்தந்தார்கள் .சென்னையை பொறுத்தவரை கடுமையான காவல்துறை கெடுபிடி  பல பகுதிகள் மூடப்பட்ட நிலையிலும் ஊழியர்களின் நலனுக்காக தொடர்ந்து அதிகாரிகளை சந்திப்பதும் கடிதங்களை கொடுத்து விவாதிப்பதும் படிப்படியாக உத்தரவுகளை பெறுவதும் பாராட்டப்படவேண்டிய விஷயமாகும் .மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில் நமது தமிழகத்தில் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது என்பதை நாம் உறுதிப்பட கூறமுடியும் .
நேற்றைய உத்தரவில் கூறப்பட்ட அடிப்படையில் பார்த்தால் 
1.வேலைபளுவிற்கு ஏற்ப குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு  அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் -இதன்படி ஒன்று ரோஸ்டர் பராமரிக்கபடவேண்டும் அல்லது விடுப்பு கேட்கிற ஊழியர்களுக்கு தடையில்லாமல் விடுப்பினை வழங்கிடவேண்டும் 
2.குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு அடிப்படை அஞ்சல் சேவைகள் சமூக இடைவெளி கடைப்பிடித்துஅளிக்க வேண்டும் -சமூக இடைவெளியை கடைபிடிக்க மீண்டும் மீண்டும் நிர்வாகத்தால் வலியுறுத்தப்படுகிறது என்றால் ஊழியர்களை ஒரேநேரத்தில் ஒரேஇடத்தில் மொத்தமாக பணிசெய்திட உத்தரவிடக்கூடாது என்பதுதான் 
               இதை அந்தந்த கோட்ட கண்காணிப்பாளர்கள் தான் புரிந்துகொண்ட ஊழியர்களின் நலன் பேனவும் சமூகஇடைவெளியை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்திடவும் வேண்டும் .
                           மாநில நிர்வாகத்துடன் பலமுறை பேசி படிப்படியாக ஊரடங்கை தளர்த்தும் அரசாங்கத்தைப்போல் படிப்படியாக ஊழியர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்திசெய்துவரும் மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களின் பணி தொடர்ந்திட  வாழ்த்துகிறோம்   
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment