...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, April 16, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                      ஊரடங்கு மேலும் நீட்டிப்பை தொடர்ந்து நேற்று நமது கோட்டத்தில் இருந்தும் சில வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன .அதேபோல் ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு உத்தரவுகள் வந்ததை பார்க்கமுடிந்தது .நேற்றைய . Ministry of home affairs orders dt 15.04.20.  உத்தரவில் கூட  சில  துறைகளை 100 சதம் பணியாற்றவும் எஞ்சியுள்ள துறைகளில் DY SECRETARY பதவிகளில் உள்ளவர்கள் 100 சதமும் ஏனைய ஊழியர்கள் 33 சதம் ஊழியர்கள் பணிக்கு வந்தால் போதும் என உத்தரவுகள் உள்ளன .நமது கோட்டத்தில் கூட சில அலுவலகங்களை தவிர (இடிந்தகரை கூடன்குளம் நாலுமுக்கு மேலப்பாளையம் மேலப்பாளையம் பஜார் ) அனைத்து அலுவலகங்களும் திறக்கப்பட்டுள்ளன .அரசாங்கம் எதிர்பார்த்த 50 சாதத்தை தாண்டி ஊழியர்கள் சதம் அடிக்க தொடங்கியுள்ளனர் ..சமூக இடைவெளி இங்கே கேள்விக்குறியாகின்றது .துணை அஞ்சலகங்களிலும் ரோஸ்டர் அனுமதிக்கப்படுகிறது .சென்னையில் தபால்காரர்களுக்கும் ரோஸ்டர் பின்பற்றப்படுகிறது .
ஒரே நாடு -ஒரே உத்தரவு ஆனால் இதை கையாளுகிறவர்கள் அவரவர் எண்ணப்படி இயக்க துவங்கிவிட்டார்கள் .மனிதரில் இத்தனை நிறங்களை ? என்பது மறந்து மனிதரில் எத்தனை நிறங்கள் என பார்த்துக்கொண்டிருக்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment