...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 28, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                             ஒருவழியாக நமது CPMG அவர்க்ளின் 24.04.2020 தேதியிட்ட  உத்தரவின் படி  பல கோட்ட நிர்வாகங்கள்  தலைமைஅஞ்சலகங்களில் சமூக விலகலை கடைபிடிக்கும் பொருட்டு மினிமம் ஊழியர்களை வரவழைத்து அனைத்து பிரிவுகளையும் இயக்கிட முன்வந்துள்ளன ..
ரோஸ்டர் என்றில்லாமல் சமூக விலகலை கடைபிடிக்கும் நோக்கத்தோடு -முழு சேவையை வழங்கிட  குறைந்தபட்ச தேவையான ஊழியர்களை கொண்டு தலைமை அஞ்சலகங்களை இயக்கிட முனைந்திருக்கும் தலைமை அஞ்சலக அதிகாரிகளின் முடிவுகள் வரவேற்கத்தக்கது .
*புதிதாக எழுத்தராக பணியில் சேர்ந்த நமது தோழர்கள் /தோழியர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராததால் தங்களுக்கு ஊதிய பிடித்தம் வருமா என தங்களது சந்தேகங்களை கேட்டுள்ளனர் .அவர்களுக்காக இந்த பதில் 
1.இந்த மாதம் யாருக்கும் ஊதிய பிடித்தம் கிடையாது .
2.மார்ச் மாதம் பணியில் சேர்ந்த GDS TO PA ஊழியர்களுக்கு 
EL 8 நாட்கள் HPL 5 நாட்கள் வழங்கப்படும் .CL யை பொறுத்தவரை CL வழங்கும் அதிகாரிகளே  முடிவு செய்வார்கள் 
3.LOCK DOWN காலத்தை எவ்வாறு முடிவெடுக்கலாம் என நமது இலாகா முதல்வரால் எந்த அறிவிப்பும் வரவில்லை .முறையான அறிவிப்பு வரும்பொழுது அதுகுறித்து முடிவெடுக்கலாம் .
*விடுப்பு தேவைப்படுகிறவர்கள் சரியான காரணத்தை கூறி விண்ணப்பங்களை அனுப்பலாம் .யாருக்கும் விடுப்பு வழங்கப்படாது என்ற நிலையில் இருந்து நிர்வாக முடிவுகள் மாறியிருக்கிறது 
*நேற்றுவரை அருகாமையில் உள்ள அலுவலகங்களில்  பணியாற்றிட ஊழியர்களின் விருப்பங்களை  பரீசீலித்த கோட்ட நிர்வாகத்திற்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment