...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 8, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து வருகிற 11.04.2020 அன்று நமது பிரதமர் அவர்கள் தனது முடிவினை அறிவிப்பார் என இன்று புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகு தகவல்கள் தெரிவிக்கின்றன .
        ஒருவேளை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் நமது கோட்ட  சங்க உறுப்பினர்களின்  நிலைப்பாடுகளை  விளக்கிடுவது நமது கடமையாகும் .முதற்கட்டமாக இந்த இடைப்பட்ட நாட்களில் பணிக்கு வரமுடியாத ஊழியர்களிடம் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்காத நமது கோட்ட அதிகாரிகள் அனைவருக்கும் (ஒருசில உப கோட்ட அதிகாரிகளை தவிர ) எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .மேலும் தொலைதூரங்களுக்கு பயணம் செய்யமுடியாத ஊழியர்களுக்கு பக்கத்து அலுவலகங்களில் பணிபுரிய வாய்ப்பளித்த நமது ASP (HOS ) அவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் முதலில் வந்தவர்கள் மட்டுமே பணிசெய்தால் போதும் என்றில்லாமல் சுழற்சி முறையில் பணிக்கு வர உடன் பட்டிருக்கும் ஊழியர்களும் முதல்கட்டமாக பணிபுரிந்திட ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இதற்கு மேலும் விடுப்பு தேவைப்படுகிறவர்களுக்கும் தயங்காமல் விடுப்பை விண்ணப்பிக்கலாம் ..இந்த நெருக்கடியில் யாரையும் கட்டாயப்படுத்தி மிரட்டி பணிக்கு அழைக்கமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்த நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக நல் ஆலோசனைகளை வழங்கிவரும் ASP(HOS ) மற்றும்  (ASP OD ) அவர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                   போக்குவரத்து தடை கொரானா அச்சுறுத்தல் உள்ள ஊழியர்கள் தயங்காமல் தங்கள் நிலைப்பாட்டினை எடுத்துக்கூறி விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் .அவர்களுக்கும் நமது கோட்ட சங்கம் வேண்டிய உதவிகளை செய்திடும் என தெரிவித்துக்கொள்கிறோம் ..
நன்றி .தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை  


0 comments:

Post a Comment