...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 8, 2020

                                                      முக்கிய செய்திகள் 
*கொரானா நிதிக்காக அஞ்சல் ஊழியர்களிடம் ஒருநாள் ஊதியத்தை அட்வான்ஸ் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்திட (விருப்பத்தின் அடிப்படையில் )அஞ்சல் வாரியம் 0704.2020 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது முன்னதாக பஞ்சப்படி நிலுவை தொகையில் பிடிக்கப்படும் என்பது மாற்றப்பட்டுள்ளது .அப்படியென்றல் பஞ்சபடி ?
*06.04.2020 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் /மத்திய அமைச்சர்களின் ஊதியத்தில் 30 சதம் ஓராண்டிற்கு குறைக்கப்பட்டு அந்த நிதி கொரானா நல நிதிக்கு சேர்க்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் மேம்பட்டு நிதி இரண்டாண்டிற்கு கிடையாது என்றும் அந்த நிதியும் கொரானா நல நிதிக்கு சேர்க்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது .
அன்று மாலை நமது பொதுச்செயலர் தனது முகநூல் பதிவில் கீழ்கண்ட  பதிவை பதிவிட்டுள்ளார் ."GET  READY FOR WAGE CUT "
எதை மனதில் வைத்து நமது பொது செயலர் இந்தப்பதிவை  பதிவு செய்தார் என்பது விரைவில் தெரியும் .
* அஞ்சல் வாரியம் மீண்டும்  F,R 56(r), FR 56(l) and Rule 4g(1xb) பென்ஷன்  உத்தரவை குறித்து வலியுறுத்தல் உத்தரவை 07.04.2020 அன்று வெளியிட்டுள்ளது .இது மீண்டும் ஊழியர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை உண்டாக்கியிருக்கலாம் .ஆனால் இது பழைய உத்தரவுகளின் தொகுப்புதானே தவிர வேறொன்றும் இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
Get Ready for Wage cut.
Get Ready for Wage cu.

0 comments:

Post a Comment