...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                           உலக பேரழிவு ,பேரிடர் கால நடவடிக்கைள் நாடெங்கிலும் அமல் /தமிழகத்தில் சிகப்பு மண்டல பகுதிக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் இல்லை போக்குவரத்து முற்றிலும் முடக்கம் .இந்தநிலையில் தான் சமூக விலகலை குறித்து கவலையில்லை பாதுகாப்பு உபகரணங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் வாகன வசதி நிர்வாகம் செய்துதராது வாகனஅனுமதி க்குநீங்களே எழுதி ஒட்டிக்கொள்ளுங்கள் ஆனால்  இன்று எப்படியாவது அனைத்து அலுவலகங்களும் இயங்கவேண்டும் அதுமட்டுமல்ல அவரவர் சொந்த இடத்தில்தான் தான் பணியாற்றவேண்டும்  என்ற நிர்வாகத்தின் நிலைப்பாடு கொரானாவை விட கொடுமையாக இருக்கிறது .
                           இதுகுறித்து  இன்று நமது CPMG அவர்களுடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது .நேற்று இரவு நமது கோட்ட நிர்வாகம் வெளியிட்ட  செய்தியில் மண்டல /மாநில நிர்வாக முடிவுகளுக்கு பிறகே அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் என்று அனைத்து அலுவலகங்களுக்கும்  தெரிவிக்கப்பட்டுள்ளது .இருந்தாலும் அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட  விரும்பும் தோழர்கள் நேற்று நாம் அனுப்பியபடி ஒரு கடிதத்தை இன்றே அனுப்பிவிட்டு கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
                          இன்று பணிக்கு செல்லமுடியாதவர்களும் தங்களது சொந்த விடுப்பை விண்ணப்பிக்கவும்.
                       நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment