...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 22, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     ஊரடங்கு தளர்த்தப்படுகிறதோ இல்லையோ மாநில நிர்வாகத்தால் ஊழியர் நலன் சார்ந்த சில  விசயங்கள் தளர்த்தப்படவேண்டியது அவசியம் .தற்சமயம் விடுப்பு வேண்டுவோருக்கு  கீழ்கண்ட அடிப்படையில் மட்டுமே விடுப்பு வழங்கப்படுகிறது என்பதனை நினைவில் கொள்ளவேண்டும் .
.Hospitalization Officials with medical history/surgery Officials with medical history/surgery
Physically handicapped Pregnant ladies
 1.நேற்று கூட இரு மூத்த தோழியர்களுக்கு விடுப்பு வழங்குவதில் ஏற்பட்ட  தாமதத்தை நமது SSP  திரு VPC அவர்களிடம் எடுத்துக்கூறியவுடன் இருவருக்கும் உடனடியாக விடுப்பு  வழங்கப்பட்டது .அதே போல் மிக நீண்டநாள் கோரிக்கையான இரண்டு தபால்காரர்களின் இடமாறுதல் உத்தரவுகளும் நேற்று  வழங்கப்பட்டது .மனிதாபிமான அடிப்படையில் ஊழியர்களின் நலன் சார்ந்த முடிவுகளை எடுத்த நமது SSP திரு .VPC  அவர்களுக்கும் நமது ASP (HOS ) திரு மாரியப்பன் அவர்களுக்கும் திரு .வேதராஜன் (ASP OD ) அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
2. அருகாமையில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றிட  அனுமதிக்கும்  CPMG அலுவலகஉத்தரவு நேற்றுமாலை வரை  நமது மண்டல அலுவலகத்தின் மூலம் கோட்ட அலுவலகத்திற்கு வரவில்லை .இன்று உத்தரவு கிடைக்கப்பெற்றவுடன் விருப்பம் தெரிவித்து மெயில் அனுப்பிய ஊழியர்களின் விருப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 
உத்தரவுகள் இன்று வெளிவரும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment