...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 14, 2020

       வரலாற்றை படிப்பவர்களால்தான் வரலாற்றை படைக்கமுடியும் !
நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்தின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் வருகிற .30.04.2020 அன்று பணிஓய்வு பெறுகிறார் .அதற்குமுன்னதாக 25.04.2020 அன்று நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்திற்கு புதிய கோட்ட செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே இன்றைய தோழர்கள் நெல்லை அஞ்சல் நான்கில் ஆளுமை செலுத்திய தோழர்கள் குறித்து அறிந்திருப்பது அவசியம் மட்டுமல்ல மென்மேலும் நமது NELLAI NFPE இயக்கத்தை வழிநடத்திடவும் இயக்கத்தில் பங்கேற்கவும் ஒரு ஆர்வத்தை உணர்வை அவர்களின் உள்ளங்களில் தூண்டும் என்பதில் சந்தேகமில்லை .ஆகவே தோழர் SK .பாட்சா 2012 முதல் 2020 வரை மிக சிறப்பாக தனது பொறுப்பினை செய்துமுடித்தார் .அதேபோல் அவருக்கு முன்பு பணியாற்றிய அஞ்சல் நான்கின் பொறுப்பாளர்கள் தோழர்கள் திவான் சங்கரநாராயணன் .தோழர் சண்முகவேல்  தோழர் அந்தோணி தோழர் சிவந்தி .பொற்செழியன் தோழர் நானு தோழர் G.கிருஷ்ணன் போன்ற தோழர்கள் மேலும் பழைய சங்கர்நகர் நான்குனேரி வள்ளியூர் திருநெல்வேலி நகரம் பாளையம்கோட்டை கிளை என விரிந்திருந்த தபால்காரர் சங்க செய்திகள் தங்களிடம் அல்லது தங்களுக்கு நெருங்கிய மூத்த தோழர்களிடம் இருந்தால் தகவல்களை எங்களுக்கு அனுப்பும் படி கேட்டு கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment