...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, April 12, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                  அலுவலக வருகையை குறித்து அஞ்சல் வாரியம் 12.04.2020 அன்று மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது .இது குறித்து நமது தோழர்களின் ஐயப்பாடுகளுக்கு சிறு விளக்கம் .
.12.04.2020 உத்தரவு படி அனைத்து அதிகாரிகளும் அதாவது ASP முதல் அனைத்து உயர் அதிகாரிகளும் பணிக்கு வரவேண்டும். .
2.ஏனைய குரூப் B (NON GAZETTED ) அதாவது HSG I முதல் MTS வரை உள்ள ஊழியர்கள் ரோஸ்டர் முறையில் பணிக்கு வந்தால் போதும் என்பதே அதன் சாராம்சம் .
3.மேலும் DOPT உத்தரவு படி பணிக்கு வருகின்ற ஊழியர்கள் கடைபிடிக்கவேண்டிய SANITATION ,.CLEANLINESS  ,AND SOCIAL DISTANCING இவைகளை பின்பற்றி கொரானா
 தொற்.றிலிருந்து நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் .
            ஆனால் நமது கோட்டத்தில் பணிக்கு வருகின்ற ஊழியர்களுக்கு  கொரானா அச்சத்தைவிட வேறுஒரு புது அச்சங்கள் மனரீதியாக ஏற்பட்டுள்ளது .இதுகுறித்து கோட்ட சங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது .
           அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவை என்பதை நம்மைப்போன்ற களத்தில் நின்று பணியாற்றும் ஊழியர்களால் தான் நிரூபிக்கமுடியும் .நிரூபித்து வருகிறோம் .
                மேலும் விடுப்பு சம்பந்தமாக அல்லது பணிக்கு வந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறை சம்பந்தமான பிரச்சினைகள் இருந்தால் எந்தநேரமும் எங்களை தொடர்புகொள்ளலாம் 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                      

0 comments:

Post a Comment