...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 1, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
    நமது அமைச்சர் அவர்களின் உத்தரவு ,நமது இலாகா முதல்வர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் நமது CPMG அவர்களின் அழைப்பு என அஞ்சலகங்களை குறைந்தபட்ச ஊழியர்களை கொண்டு இயக்கிட நமது தொழிற்சங்கமும் சம்மதித்துள்ளது .மேலும் கொரானா நோய் தொற்றில் இருந்து ஊழியர்கள் காப்பாற்றப்பட நமது பரதபிரதமர் அவர்களின் தனித்திருத்தல் அறிவிப்பு மாநிலஅரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு இவைகளை கருத்தில்கொண்டு வரவிரும்புகிற மற்றும் வர முடிகிற ஊழியர்களை வைத்து SB வித்ட்ராவல்   நம்மிடம் டெபொசிட்டில் உள்ள SPEEDPOST தபால்களை பட்டுவாடா செய்தல் போன்ற பணிகளை செய்திட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது 
இந்த அடிப்படையில் நேற்றுமாலை நமது SSP அவர்களை சந்தித்து பணிக்கு வருகின்ற ஊழியர்களுக்கு வழங்கப்படவிருக்கும் பாதுகாப்புகள் பணிக்கு வர இயலாத ஊழியர்களுக்கு கொடுக்கவேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்தோம் .
அதன்படி கீழ்கண்ட முடிவுகளை  கோட்ட நிர்வாகம்  அறிவித்தது .
1.பணிக்கு வரும் ஊழியர்களுக்கு முககவசம் மற்றும் ஹண்டவாஷ் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்கப்படும் .கிடைக்காத ஊழியர்கள் கோட்டநிர்வாகத்தை தொடர்புகொள்ளலாம் .ஊழியர்கள் சுழற்சிமுறையில் பணியாற்ற அழைக்கப்படுவார்கள் (விருப்பத்தின் அடிப்படையில் )
2.பணிபுரியும் அலுவலகங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள OUTSIDER களை தினக்கூலி அடிப்படையில் பயன்படுத்தலாம் 
3.யாரையும் பணிக்கு வரச்சொல்லி நிர்பந்தம் செய்யமாட்டோம் 
..4.வெளியூர்களில் பணிபுரிகின்ற ஊழியர்கள் விரும்பினால் அருகிலுள்ள அலுவலகங்களில் பணிவுரிய அனுமதிக்கப்படுவார்கள் 
5.இந்தஆண்டு RT  விண்ணப்பிக்க கடைசிதேதி 20.04.2020 என நீட்டிக்கப்பட்டுள்ளது 
6.50 வயதினை கடந்தவர்கள் ஏற்கனவே தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொள்பவர்கள் ,கர்ப்பிணி பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் இவர்களுக்கு விடுப்பு வழங்கிட  முன்னுரிமை கொடுக்கப்படும் 
    மாநில சங்கத்தில் இருந்து வந்த தகவல்களையும் உங்கள் பார்வைக்கு மீண்டும் பதிவிடுகிறோம் 
குறிப்பிட்டு  கட்டாயமாக அல்லாமல்  பணிக்கு வரும் ஊழியர்களை குறைந்த எண்ணிக்கையில்
சுழற்சி முறையில் பணிக்கு பயன்படுத்திடலாம். 
இது அந்தந்த பகுதியின் 
தேவைப்படி HO , S.O. என்றில்லாமல் ஊழியர்களின் சேவையை சுழற்சி முறையில்(  roster) பயன்படுத்திட அறிவுறுத்தப்படும்
ஊழியர்களின் பணி நேரம் என்பது முழுமையாக இருக்க கட்டாயப் படுத்தப் பட.மாட்டாது.
பணியின் தேவைக்கேற்ப ஆங்காங்கே இதனை நிர்ணயித்துக் கெள்ளலாம்.
முக்கியமாக ஊதியப் பட்டுவாடா/pension /money order payment/OAP /MGNREGA / PMKY அவசரத் தேவைக்கான Savings 
Account withdrawal ஆகியவற்றைச் செய்திட வேண்டும். 
OAP Money order  payment Window 
delivery
முறையில் செய்திடலாம். இதுபோல Customer தொலைபேசி எண்ணில் அழைத்து M.O பட்டுவாடா செய்திடலாம்.

ஊழியரின் பாதுகாப்புக்கான அனைத்து சுகாதார நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க நிச்சயம் உறுதி செய்யப்படும். 

அவரவர் அலுவலகங்களிலேயே தேவையானதை தடையின்றி  வாங்கிக் கொள்ள உரிய அறிவுறுத்தல் செய்யப்படும். 

எந்த ஊழியர் மீதும் 
பழி வாங்கும் விதமாக 
எந்த அதிகாரியும் நடந்துகொள்ளாமல் பார்த்துக் கொள்ளப்படும். 
எவரும் கட்டாயப் படுத்தப்பட மாட்டார்கள். 

அப்படி ஏதுவும் இருப்பின் தனது கவனத்திற்கு 
கொண்டு வரலாம்.
உடன் சரி செய்யப் படும். 

 சிறப்பு விடுப்பு குறித்து 14 ந்தேதிக்குப் பிறகு இலாக்காவுடன் கலந்து முடிவு செய்யப்படும். 

இன்சூரன்ஸ் பாதுகாப்பு.என்பது 
GDS ஊழியர்களுக்கு அளித்திட பரிசீலிப்பதாக ஏற்கனவே துறை அமைச்சர் VC ல் கூறியுள்ளார். 

Cash conveyance என்பது MMS அல்லது mail van மூலம் ஒவ்வொரு ஊருக்கும் உறுதி செய்யப்படும். 

முதியவர், உடல் நலம் குன்றியோர், PWD வகையினர் குறித்த இலாக்காவின் அறிவுறுத்தல்கள் கடைப்பிடிக்க உத்திரவு வழங்கப்படும். 

SBCO ஊழியர்களுக்கு அத்தியாவசியமான அன்றே முடிக்கவேண்டிய
பணிகள் இல்வாததால் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலித்து தேவை அடிப்படையில் முடிவு எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப் படும். 

நாட்டின் நெருக்கடியான காலத்தில் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப் பட்ட அஞ்சல் துறையில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள அனைவரின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது. 

மினிட்ஸ் வந்தவுடன் விரிவான அறிக்கை வெளியிடப்படும்

தோழமையுடன், 

A. வீரமணி, 
மாநிலச் செயலர், 
அஞ்சல் மூன்று.
நன்றி தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment