...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, April 21, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                     ஆபத்தை உணர்வது எப்போது ?
       ஒருவழியாக 20.04.2020 அன்று அனைத்து அஞ்சலகங்களையும் செயல்படவைத்ததாக மேல்மட்ட அதிகாரிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும் .சுமார் 50 முதல் 80 கிமீ தூரம் வரை ஊழியர்கள் சாலைபோக்குவரது முற்றிலும் தடைபட்ட பொழுதிலும்  அலுவலகம் சென்றுவந்ததை நிர்வாகம் கணக்கெடுத்திருக்கும் .அருகில் உள்ள அலுவலகங்களில் கூட பணியாற்றிட அனுமதி இல்லை .ஆனால் இரண்டு அலுவலகங்கள் அடுத்த அலுவலகங்களோடு இணைக்கப்பட்டது நமது கோட்டத்தில் தான் ..(மேலப்பாளையம் -மேலப்பாளையம்  .பஜார் )நேற்று காலைகூட  சென்னையில் கனவுகளை சுமந்துகொண்டுவந்த தபால்காரர் தேவபாண்டியன் மனஉளைச்சல் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் .சமூக விலகல் முற்றிலும் காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது .நேற்று நமது CPMG அவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விரைந்து கோட்டங்களுக்கு வரவேண்டும் .நேற்றுமட்டும்  சம்பளத்தை பிடி என அறிவித்திருந்தால் இரவோடு இரவாக அமுல்படுத்தப்பட்டிருக்கும் .
ஊழியர் நலன் சார்ந்தது என்றால் வழக்கத்தைவிட மெதுவாகத்தான் கோப்புகளும் நத்தை வேகத்தில் தான் நகரும் போலும் ..
                        மாநிலச்சங்கம் மூலம் வந்த நேற்றைய  கூட்டத்தின் முடிவுகள் 
1. ஏற்கனவே உத்திரவிட்டபடி, 
ஊதிய பிடித்தம் 
என்பது யாருக்கும் இருக்காது. ரோஸ்டர் முறையில் பணிக்கு வரமுடியாத ஊழியர்கள் தகுந்த காரணங்களை முறைப்படி தெரிவித்திருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்படும் . 
மேலும் பணிக்கு வராத காலத்தை எப்படி முடிவு செய்வது என்பது குறித்து தடைக்காலம் முடிந்த பிறகு முடிவுகள் எடுக்கப்படும். 

2. முன்பிருந்தது போல ,  
பணிக்கு வருவதற்கு
குறைந்த பட்ச ஊழியர்களைக் கொண்ட ரோஸ்டர் முறை மீண்டும் அமுல்படுத்திட இதர அதிகாரிகளுடன்
கலந்து ஓரிரு நாட்களில் முடிவுகள் தெரிவிக்கப்படும். 

3. உரிய பொதுப் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் அவரவர் பணி யிடத்திற்கு  செல்லமுடியாத ஊழியர்கள் அந்தந்த கோட்டத்திற்குள்ளாக 
அவர்களுக்கு  அருகாமையிலுள்ள அஞ்சலகத்தில் பணிக்கு Report 
செய்ய அனுமதிக்கப் படுவார்கள். 

4. உடல்நிலை,  
போக்கு வரத்து வசதி இல்லாமை 
போன்ற உரிய காரணங்களுடனான முறையான விடுப்பு விண்ணப்பங்கள் 
நிராகரிக்கப்பட மாட்டாது. 

5. DOPT மற்றும் DOP உத்திரவுகளின்படி 50 வயதை கடந்தவர்கள்,  நோயுற்றோர், மாற்று திறனாளிகள், 
pregnant women உள்ளிட்டோருக்கு 
உரிய விடுப்பு வழங்கப்படும். 

6. MHA, DOPT, DOP உத்திரவுகளின்படி தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட உரிய சுகாதார வசதிகள் செய்துதர
கீழ்மட்ட அதிகாரிகளுக்கு
உரிய உத்திரவுகள் வழங்கப்படும். 

7. ஊழியர்கள் தங்கள் பணி முடிந்ததும், அலுவலக நேர முடிவு வரை காத்திருக்காமல் அவரவர் இல்லம் திரும்பலாம்.
                        ஏற்கனவே அருகிலுள்ள அலுவகத்தில் பணியாற்றியவர்கள் மீண்டும் ஒரு விருப்ப கடிதத்தை அனுப்பிவிட்டு கோட்ட சங்கத்திற்கும் தகவல்களை தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
            
              

0 comments:

Post a Comment