...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 19, 2019

                       தோழர்  கோமதி நாயகம்  APMA/CS  அம்பத்தூர் அவர்களின் தன் விருப்ப ஓய்வு --21.11.2019 -நெல்லை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது 

 கோமதிநாயகம் எனும்
 கொள்கை குன்றே !
 தன்விருப்ப ஓய்வு எனும்
உன் விருப்பத்தை நீயுமா  தேர்தெடுத்தாய் ?

அம்பையில் இருந்தாலும்
அம்பத்தூரில் இருந்தாலும்
நெல்லையில் உனக்கென
நிரந்தர இடம் இன்னும் நிரப்படாமலே ......

இலாகா பணியிலும் -நம்
இயக்க பணியிலும் ஒருசேர
பயணித்தவன் நீ --

எங்கள் ஐயங்களுக்கு
வினாக்களுக்கும் அவ்வப்போது
பதிலளித்தவன் நீ !

வயது வேறுபாடு ஏதுமின்றி
எங்களோடு பல நாட்கள்
பயணித்தவன் நீ !

கேடர் வித்தியாசம் ஏதுமின்றி
கேட்பவர்கள் அனைவருக்கும்
பலனளித்தவன் நீ !

சாஸ்திரங்களை கற்று அறிந்திருந்த போதிலும் 
கணக்கு சூத்திரங்களை பத்திரமாய் 
பாதுகாத்தவன் நீ !

இறுக்கமாக இருப்பதுபோல் தெரியும்
நெருக்கமாக நம் அணியில் இருந்ததை
பக்குவமாய் பார்த்துக்கொண்டவன்  நீ !

ஆதாரம் இருந்தால் மட்டுமே 
அதிகாரிகளோடு வாதாடுவாய் !அதிலும் 
சேதாரம் இல்லாமல் நடந்து கொண்டவன் நீ !

உன் பணிநிறைவு நாட்கள் சிறக்க
வாழ்த்தி மகிழ்கின்றோம் ..

     என்றும் அன்புடன் ----SK .ஜேக்கப் ராஜ் -----











           

0 comments:

Post a Comment